tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சத்தீஸ்கரில் 30 ‘நக்சல்கள்’ சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப்படை 30 நக்சல்களை சுட்டுக் கொன்றதாக அறிவித்துள்ளது.  இந்தாண்டு மட்டும்  ‘நக்சல்கள்’ சுமார் 150க்கும் மேற்பட்டோர் சத்தீஸ்க ரில் மட்டும் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர்-பிஜாப்பூர் வனப்பகுதியில் உளவுத்தக வல் அடிப்படையில் மாவட்ட ரிசர்வ் காவல்படை, மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் சிறப்பு காவல் படை ஆகியவை  கூட்டு நடவடிக்கை நடத்தியதாகவும் அப் போது பாதுகாப்புப் படைக்கும் நக்சல்களு க்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 30 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாது காப்புப் படை வீரர்களில் ஒரு வீரர் காய மடைந்தார் என்றும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பெங்களூரு கனமழை :  பலி 5 ஆக உயர்வு

பெங்களூருவில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரண மாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.   பெங்களூருவில் இதற்கு முன்னதாக  1909 மே 6 அன்று  153.9 மிமீ மழை பதிவா னது. இதற்கு அடுத்து 2011 மே மாதம் 112 மிமீ மழையும், 2022 மே மாதத்தில் 114.6 மிமீ மழையும் பதிவானது. இதற்கு பிறகு கடந்த மே 18 ஞாயிறன்று 136 மிமீ  மழையே அதிகபட்சமாக உள்ளது. தற்போது வானிலை ஆய்வு மையம் மே 25 ஞாயிற்றுக்கிழமை வரை பெங்களூருவில் கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்ச ரிக்கையைத் தொடர்ந்து ஒரு சில தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்க ளை வீட்டிலிருந்து வேலை செய்ய அறி வுறுத்தியுள்ளன.