தையல் தொழிலாளர் சங்கத்தின் 25 ஆவது ஆண்டு பேரவை
கூடுதல் ஊக்கத்தொகை வழங்கக் கோரி தீர்மானம்
திருவாரூர், ஜுன் 16- திருவாரூர் மாவட்ட தையல் தொழிலாளர் சங்கத்தின் 25 ஆவது வெள்ளி விழா ஆண்டு பேரவை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. பேரவைக்கு பி. ரேவதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் இரா. மாலதி வேலை அறிக்கை வாசித்தார். ஆர். கலா வரவு, செலவு அறிக்கையை முன் வைத்தார். முன்னதாக சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என். அனிபா துவக்கவுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் கே. கஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பிரேமா உள்ளிட்ட மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர். சிபிஎம் செயற்குழு உறுப்பினர் கே.பி. ஜோதிபாசு நிறைவுரையாற்றினார். பேரவையில் மாவட்டத் தலைவராக கே. ஆனந்தி, மாவட்டச் செயலாளராக பி.ரேவதி, மாவட்டப் பொருளாளராக ஆர்.கலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தையல் கலைஞர்களுக்கு இலவச தையல் மெஷின் மற்றும் இலவச மின்சாரம் வழங்கிட வேண்டும். கூட்டுறவு தையல் சங்கத்தில் பணிபுரியும் மகளிர் தையல் கலைஞர்களுக்கு, தையல் கூலியை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 25-ஆவது ஆண்டு பேரவையை முன்னிட்டு நிர்வாகிகளுக்கு நினைவு சீல்டு வழங்கப்பட்டது.