tamilnadu

img

22 லட்சம் பேரின் வேலை பறிபோகும் அபாயம்

பணிப் பாதுகாப்பு சட்டம் இயற்றுமா அரசு?

சென்னை, டிச.18-  தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனங் களில் வேலை பறிப்பு 30 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் வாழ்வாதார நெருக்கடியில் மென்பொறியாளர்கள் தவித்து வருகின்றனர்.  தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறு வனங்கள் பல ஆண்டுகளாக முக்கிய வேலை வாய்ப்புகளை உருவாக்கின. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இத்துறை 227 பில்லி யன் டாலர் வளர்ச்சியை கண்டுள்ளதாகவும், இந்த வளர்ச்சி மூலம் நடப்பு நிதியாண்டில் 0.45 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேவேளையில் ஐ.டி. நிறுவனங்களில் வேலை பறிப்பு தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. ட்விட்டர், மெட்டா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் செலவை குறைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஊழி யர்களை சமீபத்தில் பணிநீக்கம் செய்தன. அந்த வகையில் டீம் லீஸ் டிஜிட்டல் என்ற  நிறுவனம் நடத்திய ஆய்வில் 2025-ம்  ஆண்டுக்குள் ஐ.டி. துறையில் 22 லட்சம்  வேலை இழப்புகள் ஏற்படும் என தெரி வித்துள்ளது. இதற்கு பொருளாதார மந்த நிலை காரணம் எனக் கூறுகின்றனர்.

இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தைகளாக திகழும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை நீடிப்பதன் தாக்கம் இந்திய ஐ.டி.  நிறுவனங்களில் வேலை இழப்பு அபாயத்தை ஏற்படுத்தி யுள்ளது. குறிப்பாக ஐ.டி. நிறு வனங்கள் தங்களது பணி யாளர்களை மிரட்டி அவர்களை ராஜினாமா செய்ய (post resignation) வற்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நாடு முழுவதும் 60 லட்சத்துக்கும் மேலான ஐ.டி. ஊழியர்கள் உள்ளனர். கடந்த  காலங்களில், ஆண்டுதோறும் 15 சதவீதம்  வரை ஐ.டி. ஊழியர் வேலை பறிக்கப்பட்டு வந்தது. தற்போது இது ஆண்டுக்கு 30 சதவீத மாக உயர்ந்துள்ளது. இதனால், வாழ்வா தார நெருக்கடியில் மென் பொறியாளர்கள் தவிக்கின்றனர்.

இதுகுறித்து ஐ.டி. மற்றும் ஐடிஇஎஸ் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அழகுநம்பி வெல்கின் கூறியதாவது: ஐ.டி. நிறுவனங்களில் தற்கா லிக பணிநீக்கம் என்பதைவிட நிரந்தர பணி நீக்கம்தான் நடந்து கொண்டிருக்கிறது. நிரந்தர பணி நீக்கத்துக்கான வரை யறையுடன் ஒரு சட்டம் இந்தி யாவில் இருக்கிறது. நிறு வனத்தில் ஏற்படும் இழப்பை கார ணம் காட்டித் தான் நிரந்தர  பணி நீக்கத்தை அந்நிறு வனங்கள் செய்ய முடியும் என அச்சட்டம் தெரிவிக்கிறது. ஆனால், பல நூறு கோடி ரூபாய் லாபம் ஈட்டிவரும் நிறுவனங்கள், அடுத்த சில ஆண்டுகளில் ஏற்படக்கூடிய பொருளாதார மந்தநிலையை கருத்தில் கொண்டும், தங்கள் லாபத்தை மேலும் அதி கரிக்கவும் சட்டத்துக்கு மாறாக ஐ.டி. ஊழி யர்களை மிரட்டி அவர்களை ராஜினாமா செய்ய வற்புறுத்தி வருகின்றன.

சென்னையிலும் தற்போது சில  முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் இதுபோல  அதிக அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கை யில் ஈடுபட்டு வருகின்றன. ஊழியர்களை வேலையில் இருந்து விடுவிப்பதைவிட, ஊழியர்களே நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்து கொண்டால், சட்டப்பூர்வ மான எதிர்ப்புகள் எதுவும் வராது என ஐ.டி. நிறுவனங்கள் கருதுகின்றன. ஆனா லும், மிகப்பெரிய அளவில் நடக்கும் இது போன்ற வேலை பறிப்புகள் எதுவும் அரசின் கவனத்துக்கு செல்வது இல்லை. சமீபத்தில் சென்னையில் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ‘வெர்ச்சூசா’, நூற்றுக்கணக்கான தொழிலா ளர்களை வேலையைவிட்டு வெளியேறு மாறு சட்டவிரோதமாக வற்புறுத்துவதாக தகவல் கிடைத்தது. தொழிலாளர்கள், தாங்களே ராஜினாமா செய்வது போல கையெழுத்திடச் செய்து கட்டாயப்படுத்து வது சட்டப்படி குற்றமாகும்.  பொருளாதார மந்தநிலை இன்னும் இந்தி யாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வில்லை என்றாலும், இதுபோன்ற ஆயிரக் கணக்கான ஐ.டி. நிறுவன ஊழியர்களின் வேலை இழப்பு, பொருளாதார மந்தநிலை அறிகுறியை வெளிப்படுத்துகிறது. ஐ.டி. துறைக்கென பிரத்யேக அம்சங்களுடன் கூடிய சட்டத்தை அரசு அமல்படுத்துவதன் மூலமாக மட்டுமே வேலை இழப்பை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.