2024 ஜுலை இரண்டாவது வாரம் தொடங்கிய நிலச்சரிவுச் செய்திகள் ஒரு மாத காலமாக நீடித்து வருகின்றன. இதிலும் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு இந்தியாவின் மிகப்பெரும் துயரங்களில் ஒன்றாக வரலாற்றில் பதிவாகி விட்டது. மற்றொன்று கர்நாடக மாநிலம் சிரூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 66 இல் ஏற்பட்ட நிலச்சரிவு. இந்த இரண்டு துயர நிகழ்வுகளிலும் இருவேறு காட்சிகளைக் காண முடிந்தது.
ஜுலை 29 அன்று ஒன்றிய அரசின் வானிலை ஆய்வு மையம் வயநாடு மாவட்டத்திற்கு ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுத்திருந்தது. இதை வழக்கமான ஒன்றாகவே கருதி அதற்குரிய முன்னெச்சரிக்கை அறிவிப்பையும் நட வடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் செய்தி ருந்தது. அதற்கு முந்தைய இரண்டு நாட்க ளாகவே தொடர்ச்சியாக பெய்த மழையை உள்வாங்கிய புஞ்சிரிமட்டம் மலைப்பகுதியின் பசுமை போர்த்திய மேல்தட்டு, நிறைமாத கர்ப்பிணி போல வீர்த்து நின்றது. அதிகாலை 2 மணியைக் கடந்த சற்று நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவர் களை திடுக்கிட்டு எழச்செய்தது அந்த பேரி ரைச்சல். சற்று நேரத்தில் வீடுகளுக்குள் சேறும் சகதியும் நுழைந்தது. நிலச்சரிவு ஏற்பட்டி ருப்பதை உணர்ந்து அலறியடித்துக்கொண்டு பகுதிக்கு சென்றுள்ளனர். நேரம் செல்லச் செல்ல வெள்ளத்தின் தீவிரம் அதிகரித்தது. அடுத்த சுமார் 2 மணி நேரத்தில் அடுத்த நிலச் சரிவு ஏற்பட்டு பெரும் பாறாங்கற்களை உருட்டிக்கொண்டு வந்த வெள்ளம் மரங்களை யும் வீடுகளையும் சாய்த்தது. மேடான பகு திக்கு சென்ற சுமார் நூறு பேரில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் மளமளவென சரிந்த மண்ணு டன் காணாமல் போனார்கள். அழுது துடித்த வர்களின் குரல் அந்த கட்டற்ற பெருவெள்ளத் தில் கரைந்துபோனது.
இருள் விலகாத அடுத்த சில மணி நேரங்களில் தகவல் வெளியாகி கேரளம் அல றித்துடித்தது. சேறுக்குள் மிதந்தவர்களை மீட்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சூரல்மலை செல்லும சாலைகளை நிறைத்தனர். இரு வஞ்சிப்புழா ஆற்றின் குறுக்கே சூரல்மலையை யும் முண்டக்கையையும் இணைக்கும் பாலம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருந்தது. தீய ணைப்பு மற்றும் மீட்பு படையினர் உடன் இணைந்து கயிறு கட்டியும் பாக்கு மரத்தால் ஆன தற்காலிக பாலம் அமைத்தும் தனி மைப்பட்டிருந்த மக்களை அணுகி நம்பிக்கை அளித்தனர். இரவு பகலாக 30 மணி நேரத்தில் இரும்பால் ஆன பெய்லி பாலம் அமைத்து மீட்புப் பணிக்கு பேருதவி செய்தது ராணு வத்தின் மெட்ராஸ் ரெஜிமெண்ட். பல்லாயி ரக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 2018 ஆகஸ்டில் கேரளத்தின் 14 மாவட் டங்களையும் சூழ்ந்த பெருவெள்ளத்தின் போது மீனவர்களுடன் கேரளத்தின் சொந்த ராணுவமாக ஒரு இளைஞர் படை மீட்பு நட வடிக்கைகளில் ஈடுபட்டது. பின்னர் தன்னார் வலர்களாக பதிவு செய்த சுமார் 18,000 இளை ஞர்களுக்கு கட்சி வேறுபாடுகளைக் கடந்து பயிற்சி அளித்தது அம்மாநில அரசு. அவர் களில் 5403 தன்னார்வத் தொண்டர்கள் வய நாடு மீட்பு நடவடிக்கைகளில் தங்களை ஈடு படுத்தியதாக வருவாய்த்துறை அமைச்சர் கே. ராஜன் தெரிவித்துள்ளார். இதில் சாலி யாற்றில் நடந்த சாகசம் நிறைந்த இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினரின் துணிச்சலான பணிகள் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
இதற்கு முன்பு ஜுலை 16 அன்று உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள அங்கோலா வின் சிரூர் பகுதிக்கு அருகே தேசிய நெடுஞ் சாலை 66 இல் ஒரு மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. அருகில் உள்ள கங்காவலி ஆற்றில் காணாமல் போனது இரண்டு லாரிகளும் சில மனிதர்களும், இதில் கேரளத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் அர்ஜுனை காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடியபோதுதான் நிலச்சரிவு நடந்ததை வெளி உலகம் அறிந் தது. மூன்று நாட்களுக்குப் பிறகு 19 ஆம் தேதி கர்நாடக சட்டமன்றத்தில் அம்மாநில வரு வாய்த் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரி ழந்துள்ளனர் மற்றும் பலரை காணவில்லை என அறிவித்தார். அடுத்த சில நாட்களில் தேடு தல் பணி நிறுத்தப்பட்டதால் அர்ஜுனின் குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகினர். அதன் பயனாக ஒரு மாதம் கடந்த பின்னும் கங்காவலி ஆற்றில் தேடுதல் நடைபெற்று வருகிறது. கங்காவலி ஆற்றின் கரையில் சிரூரில் லட்சுமணன் என்பவர் தேநீர்க் கடை நடத்தி வந்தார். அவரது கடையும் அருகில் நின்ற வர்களும் லாரிகளும் காணாமல் போன பிறகு 7 சடலங்களை மீட்டதிலும், தொடர்ச்சியாக நடக்கும் தேடுதலிலுல் கடற்படை உட்பட இதர மீட்புப் படையினரும் உள்ளனர். செய்தியா ளர்களைக்கூட கங்காவலி ஆற்றை நெருங்க விடாத கெடுபிடியை காவல்துறையினர் மேற்கொண்டனர். ஆனால் வயநாட்டில் ஆயி ரக்கணக்கான தன்னார்வலர்கள் தீயணைப்பு மீட்புப் படை, காவல், ராணுவம் உள்ளிட்ட இதர படையினருடன் இணைந்து பணிகளை மேற்கொண்டனர். மட்டுமல்ல பிரதமர் மோடியின் வருகைக்கு முந்தைய நாளும் அடுத்த நாளும் காணாமல் போனவர்களின் உறவினர்களாக உள்ள தன்னார்வலர்கள், உள்ளுர் மக்களை ஈடுபடுத்தி வெகுஜன தேடுத லும் நடைபெற்றது. அதில் சில உடல் உறுப்பு கள் மீட்கப்பட்டன. கங்காவலி ஆற்றிலும், சாலியாற்றிலும் மனித உடல்களைத் தேடும் பணி இன்னும் நிறைவு பெறவில்லை.
முன்னுதாரணமான இறுதி நிகழ்ச்சி
வயநாடு நிலச்சரிவில் இருந்து 231 உடல்கள், 212 உடல் உறுப்புகள் மீட்கப்பட்டன. காணாமல் போனதாக கருதப்படுவோர் 118. படுகாயம் அடைந்தோர் 397. அடையாளம் காணப்படாத 52 உடல்கள், 194 உடல் உறுப்புகள் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஒவவொரு உடலுக்கும் உடல் உறுப்புக்கும் தனித்தனி எண்கள் கொடுக்கப்பட்டன. கண்ணாடி பாட்டிலில் அடைக்கப்பட்ட எண்ணுடன் அடக்கம் செய்து இருபுறமும் கல்வெட்டிலும் பொறித்தனர். உறவினர்களின் டிஎன்ஏ மூலம் கண்டறியப்பட்டால் மேல் நடவடிக்கைக்கு இது உதவும். மேப்பாடியில் உள்ள ஹாரிசன் மலையாளம் தேயிலைத் தோட்டத்தில் தனித்தனி குழிகளில் அனைத்து மத வழிபாட்டுடன் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன. இதுவரை எங்கும் பார்த்திராத மனிதநேயத்தின் வெளிப்பாடு இதுவாகும்.