tamilnadu

img

மார்ச் 6-நாகர்கோவிலில் பிரம்மாண்ட விழா

தமிழ்நாடு- கேரளா முதல்வர்கள் பங்கேற்கின்றனர்

தோள்சீலைப் போராட்டத்தின் 200 ஆம் ஆண்டு நிறைவு விழா மார்ச் 6-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திடலில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்கின்றனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின் தலைமை வகிக்கிறார்.  நாகர்கோவில் மாநகர மேயர் ரெ.மகேஷ் வரவேற்புரை நிகழ்த்து கிறார். தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அறிமுக உரையாற்றுகிறார். பூஜிதகுரு.பால பிரஜாபதி அடிகளார், விஜய் வசந்த் எம்.பி., சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல வாரிய தலைவர் பீட்டர்  அல்போன்ஸ் ஆகியோர் பேச உள்ளனர். சட்டமன்ற, உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.

தோள்சீலைப் போராட்டத்தின் 200 ஆம் ஆண்டு நிறைவு விழா மார்ச் 6-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திடலில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்கின்றனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின் தலைமை வகிக்கிறார்.  நாகர்கோவில் மாநகர மேயர் ரெ.மகேஷ் வரவேற்புரை நிகழ்த்து கிறார். தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அறிமுக உரையாற்றுகிறார். பூஜிதகுரு.பால பிரஜாபதி அடிகளார், விஜய் வசந்த் எம்.பி., சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல வாரிய தலைவர் பீட்டர்  அல்போன்ஸ் ஆகியோர் பேச உள்ளனர். சட்டமன்ற, உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.

18 சமூக மக்களும் கிறித்தவர்களும்

தெற்கு திருவிதாங்கூர் பகுதியில் நாடார், ஈழவர், முக்குவர், சாம்பவர்  உள்ளிட்ட 18 ‘கீழ்சாதிப்’ பெண்கள்  மேலாடையின்றி திறந்த மார்பகத் தோடு இருக்க, நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். இதற்கு எதிரான போராட்டங்களை ஒடுக்க பெரும் கலவரம் ஆதிக்க சாதியினரால் தூண்டி  விடப்பட்டது. இதுகுறித்து ஆங்கிலேய  பாதிரியார்கள் இந்திய, இங்கிலாந்து அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக கிறித்தவ  பெண்கள் குப்பாயம் அணிந்து கொள்ள மன்னராட்சி அனுமதி அளித்தது. ஆனாலும் கிறித்தவ ரல்லாத இதர பகுதி பெண்களுக்கு மார்பு மறைக்கும் உரிமை மறுக்கப் பட்டிருந்தது. இதன் காரணமாக, மார்பை மறைக்கும் உரிமைக்காக ஒடுக்கப்பட்ட சமூக மக்களில் ஒரு பகுதி யினர் கிறித்தவ மதத்திற்கு மாறினர். அந்த நிலையில் குப்பாயம் அணிய வும் எதிர்ப்பு தெரிவித்து, 1822 மார்ச் மாதத்தில் நடந்த போராட்டத்தை பெருங் கலவரமாக ஆதிக்க சாதியினர் மாற்றினர்.

அய்யா வைகுண்டரின் புரட்சி

இந்த காலகட்டத்தில்தான் இளை ஞராக இருந்த அய்யா வைகுண்டர்  ஒரு புரட்சி செய்தார். கன்னியா குமரியை ஒட்டிய பகுதிகளில் வசித்த  நாடார் சமூகப் பெண்களை தோள் சீலை அணியச் செய்தார். சுசீந்திரம் வந்த மன்னன், இதை அறிந்து வைகுண்டரை அழைத்து, அரசின் உத்தரவுப்படி தோள்சீலை அணி வது குற்றம் எனக் கூறி அரசின் உத்தர வுக்கு கீழ் படியுமாறு உத்தர விட்டுள்ளார். அய்யா வைகுண்டர் ஏற்க மறுத்ததால், அவரை அடித்து இழுத்துச் சென்று திருவனந்தபுரம் சிறையில் 112 நாட்கள் அடைத்து கடும்  சித்ரவதைக்கு உள்ளாக்கினர். ஆதிக்க சாதியினரின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக வெகுண்டெ ழுந்த ஒடுக்கப்பட்ட இந்துக்களும் குப்பாயம் உரிமையும் மறுக்கப்பட்ட கிறித்தவர்களும் கரம் கோர்த்தனர். கன்னியாகுமரி அருகில் உள்ள சந்தை க்கு தோள்சீலை அணிந்து சென்ற   பெண்களின் சீலையை தீண்டாமை உணர்வுடன் நீண்ட கம்பால் அகற்றிய போது தாலியும் சேர்ந்து அறுக்கப் பட்டது. இதற்கு எதிராக ஆவேசமான போராட்டங்கள் நடந்துள்ளன. இன்றும்  அந்த சந்தை ‘‘தாலி அறுத்தான் சந்தை’’ என்றே அழைக்கப்படுகிறது. 

ஒற்றுமையின் அடையாளம்

மார்பு மறைத்து மேலாடை அணி யும் உரிமைக்காக கிறித்தவர்களும் ஒடுக்கப்பட்ட இந்துக்களும் கரம் கோர்த்து நடத்தியதே தோள்சீலைப் போராட்டம். அது ஆதிக்கத்தை எதிர்த்த ஒற்றுமையின் அடையாளம்.  இந்நிலையில், கோயில்களை மையமாக கொண்டு சனாதன (அ)  தர்மத்தை  பரப்ப மீண்டும் ஆதிக்க சக்தி கள் களமிறங்கியுள்ளன. அதற்கு எதி ரான அணிவகுப்பில் குமரி மாவட்ட மக்களை தோள்சீலைப் போராட்ட நினைவுகள் இணைக்கின்றன.