tamilnadu

img

கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி

சென்னை, பிப். 20- கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சிறந்த விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப் படும். ஆதிதிராவிடர் பழங்குடி விவசாயிகளுக்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு. 2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215. சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை அதிகரிக்க ரூ. 12.40 கோடி ஒதுக்கீடு. கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி ஒதுக்கீடு. பகுதிசார் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.2.70 கோடி நிதியில் விவசாயிகளுக்கு நடவு  செடிகள். ரூ.3.64 கோடியில் வறண்ட நிலங்களில் ஒருங்கி ணைந்த “தோட்டக்கலை மேம்பாட்டு திட்டம்”. பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்க 100 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.