சுமார் ரூ.18 கோடிக்கு நல உதவிகள், செயற்கை உறுப்புகள் வழங்கல்
மதுரை, அக். 12 - “காவியாவுக்கும் அட்டை கொடுத்துவிட்டீர்களா” என்று, கூட்டத்திற்குள் இருக்கும் ஒரு குழந்தையை சுட்டிக்காட்டி அந்தச் சிறுவன் தனது சைகை மொழியில் கேட்கிறான். “காவியாவுக்கும் கொடுத்து விட்டோம், கவலைப்படாதே” என்று அவனிடம் சொல்கிறார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர். கண்களில் மகிழ்ச்சி பொங்க, மைக்கை கையில் வாங்கி சைகை மொழியில் நன்றி சொல்கிறான் தருண் சோலை. உணர்ச்சிப் பெருக்கோடு இந்தக் காட்சி கடந்த சில நாட்களாக அனைத்து சமூக ஊடகங்களிலும் வைரலாக மாறியது. மதுரை மாவட்டம் முழுவதும் 15 மையங்களில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்களில் இதுபோன்ற ஆயிரம் ஆயிரம் காட்சிகளை காண முடிந் தது. எங்கெங்கும் உணர்ச்சி வெள்ளம். எல்லோர் கண்களிலும் நன்றியுடன் கூடிய கண்ணீர் பெருக்கு. பல ஆண்டுகாலம் நடை யாய் நடந்தும் கிடைக்கப்பெறாத நல உதவிகள், செயற்கை உடல் உறுப்புகள் தங்களுக்கு; தங்களது மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு, உற்றார் உறவினர்களுக்கு கிடைக் கப்பெற்ற அளவிட முடியாத உற்சாகம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயற்குழு உறுப்பின ரும், மதுரை நாடாளுமன்ற உறுப் பினருமான சு.வெங்கடேசன், கடந்த மூன்றாண்டு காலம் தீவிரமாக முயற் சிகள் மேற்கொண்டு, ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளின் சமூக நலத்துறைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த 24 பிரிவுகள் சார்ந்த துறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து; மதுரை மாவட்ட அரசு நிர்வாகம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரது உழைப்பையும் ஒத்துழைப்பையும் பெற்று செப்டம்பர் 24 அன்று துவங்கி அக்டோபர் 12 வரை 15 மையங்களில் மிகவும் வெற்றிகர மாக மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவம் மற்றும் அலிம்கோ நிறுவனம் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கு வதற்கான சிறப்பு முகாமை நடத்தி னார். மதுரை மாநகரிலும் புறநகரிலு மாக 15மையங்களில் நடைபெற்ற இந்த முகாம்களில் சுமார் 18 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் நேரடி யாக பங்கு பெற்று, கிட்டத்தட்ட அனைவருக்கும் அவர்களுக்கு பொருத்தமான உதவிகள் உடனடி யாக வழங்கச் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள் தவிர சிறப்பு பள்ளி குழந்தைகள் 2500 பேருக்கும் உதவிகள் வழங்கப்பட்டன. மாற்றுத் திறனாளிகளுடன் அவர்களது உத வியாளர்கள், உடனிருப்பவர்கள், உறவினர்கள் என்ற முறையில் சுமார் 60ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டது குறிப் பிடத்தக்கது.
இம்முகாம்களின் நிறைவாக திருப்பரங்குன்றம் மன்னர் கல்லூரி யில் அக்டோபர் 12 புதனன்று நடை பெற்ற முகாமில் பேசிய சு. வெங்கடேசன் எம்.பி., தென்னிந்தி யாவில் முதல் முறையாக சுமார் 20 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் உறுதி செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் மட்டும்தான் இதுவரை மாற்றுத் திற னாளிகளுக்கு இத்தகைய முகாம்கள் நடத்தப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அங்கு 21ஆயி ரம் பேருக்கு உதவிகள் வழங்கப் பட்டன. அதைவிட கூடுதலான எண்ணிக்கையில் வழங்கிட வேண்டும் என்ற முனைப்புடன் இந்த பணியை துவக்கியதாகவும், பிரத மர் தொகுதியிலேயே 21 ஆயிரம் பேர் என்ற நிலையில், ஒரு சாதாரண - அதுவும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பின ரின் தொகுதியில் சுமார் 20 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு அத்தனை உதவிகளையும் பெற்றுக் கொடுக்க முடிந்திருக்கிறது என்றால், இதற்காக உழைத்த துறை சார்ந்த அனைத்து அலு வலர்கள் மற்றும் ஊழியர்கள் மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் மிகப் பெரும் ஒத்துழைப்பு, ஒருங்கி ணைப்பு, திட்டமிடல் ஆகியவையும் இதற்காக உழைத்த எண்ணற்ற ஊழியர்களின் அர்ப்பணிப்புமே காரணம் என்று குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உதவிகள் குறித்து குறிப்பிட்ட அவர், ஒன்றிய அரசின் சமூக நலன் மற்றும் அதி காரம் அளித்தல் துறையின் கீழ் செயல்படக்கூடிய - செயற்கை உறுப்புகளை உருவாக்கி அளிக்கக் கூடிய அலிம்கோ நிறுவனத்தின் பங்கு இதில் மிக முக்கியமானது என சுட்டிக்காட்டினார். இந்த முகாம் களில் செயற்கை கைகள், கால்கள், காது கருவிகள் மற்றும் செயற்கை உடல் உறுப்புகள் தேவை என்ற நிலையில் 4ஆயிரத்திற்கும் மேற் பட்ட மாற்றுத் திறனாளிகள் அடை யாளம் காணப்பட்டார்கள். அவர் களுக்கு உடனடியாக உரிய அளவு களை எடுத்து அலிம்கோ நிறுவனம் செயற்கை உறுப்புகளை வழங்க இருக்கிறது. 45 நாட்களில் அந்த உபகரணங்கள் அவர்களுக்கு கிடைக்கப்பெற உள்ளது.
இதன் மதிப்பு சுமார் 8 கோடி முதல் ரூ.10 கோடி வரையில் இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர ஒன்றிய அரசின் சமூக நலன் மற்றும் அதிகாரம் அளித்தல் துறை யின் இதர பிரிவுகள் மற்றும் தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் நலவாரியப் பதிவு தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை, பரா மரிப்பு உதவித்தொகை, இணை ப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட் ரோல் ஸ்கூட்டர், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, பிரெய்லி கைக்கடிகாரம், மடக்கு ஊன்று கோல், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், காதொலி கருவி உள்பட ஆயிரக்கணக்கா னோருக்கு உதவிகள் முகாம்களி லேயே உறுதி செய்யப்பட்டன. ரூ.1000 உதவித்தொகை பெறக் கூடிய நபர்களுக்கு அவர்களது வாழ்க்கைச் சூழலை அறிந்து பலருக்கு முகாம்களிலேயே ரூ.2ஆயிரமாக உயர்த்தி ஆணை பெறப்பட்டது. இந்த வகைகளில் தமிழக அரசின் சார்பில் சுமார் ரூ.7 கோடி அளவிற்கு உதவிகள் அளிக் கப்பட்டிருக்கக்கூடும் என மதிப்பிடப் பட்டுள்ளது. முழுமையான விப ரங்கள், அரசு துறைகளின் விரி வான மதிப்பீடுகளுக்குப் பிறகு தெரியவரும். மொத்தத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திற னாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஒட்டுமொத்த மாக சுமார் ரூ.15 கோடி முதல் ரூ.18 கோடி வரை மேற்கண்ட பல்வேறு வகையிலான உதவிகள் இந்த முகாம்களில் உறுதி செய்யப் பட்டுள்ளன என சு.வெங்கடேசன் எம்.பி., தெரிவித்தார்.
அலிம்கோ நிறுவனம் மற்றும் தமிழக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 45 நாட்களில் வழங்கப்பட உள்ள செயற்கை உறுப்புகள் மற்றும் இதர கருவி களை வழங்கும் நிகழ்வை பெரும் விழாவாக நடத்த திட்டமிட்டுள் ளோம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த முகாம்கள் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு அனைத்து வழி களிலும் ஒத்துழைப்பும் உதவிகளும் நல்கிய தமிழக அரசுக்கும், முதல் வருக்கும், அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, பூமிநாதன், ஏ.வெங்க டேசன் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.