tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

2 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த 2 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர். கூடுதல் நீதிபதிகளாக இருந்த சி.குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர். இருவருக்கும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஸ்ரீராம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த 2 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர். கூடுதல் நீதிபதிகளாக இருந்த சி.குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர். இருவருக்கும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஸ்ரீராம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 56 வேலைநாட்களில் குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 12  ஆவது முறையாக அட்டவணையில் குறிப்பிட்ட மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அரசு அனுமதிக்காது!

சென்னை: மக்கள் விருப்பத்திற்கு மாறான எந்த ஒரு திட்டத்தையும் அரசு அனுமதிக்காது என்று அமைச் சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். குமரியில் கடலில்  எரிவாயு எடுக்கும் விவகாரத்திலும் அரசின் நிலைப்பாடு இதேதான் என்று தெரிவித்த அவர், மக்கள் வாழ்வாதா ரத்தை பாதிக்கும் திட்டங்களை திமுக ஒருபோதும் அனு மதிக்காது என்றும் கூறினார்.

மகளிருக்கு அடையாள அட்டைகள்

சென்னை: தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களில் இடம்பெற்றுள்ள 60 லட்சம் மகளிருக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணியை 9 மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் உறுப்பினர் பெயர், மகளிர் சுய உதவிக்குழுலின் பெயர், பிறந்த தேதி, ரேசன் அட்டை எண், முதலமைச்சரின் விரி வான காப்பீட்டு திட்ட எண், ரத்த வகை, முகவரி உள்ளிட்ட  விவரங்களுடன் QR Code-ம் இடம்பெறும்.

எச்சில் இலை சடங்கிற்கு தடை நீட்டிப்பு!

கரூர்: கரூர் மாவட்டம் நெரூரில் எச்சில் இலையில் உருளச் செய்யும் சடங்குக்கு தடை நீடிக்கும் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. எச்சில் இலை யில் உருளச் செய்யும் சடங்கு தொடர்பான வழக்கை முறை யாக நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் வலியுறுத்தியுள்ளார். எச்சில் இலை சடங்குக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில், அரசு கேவியட் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். எச்சில் இலை  சடங்கை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிமருந்து ஆலையில் விபத்து

திருப்பூர்: பல்லடம் அருகே தோட்டா தயாரிக்கும் வெடி மருந்து ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.  மல்லேகவுண்டம்பாளையத்தில் உள்ள ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் வெடிமருந்து கிடங்கு தரைமட்டமானது.

தவெக கட்சியினர் மீது வழக்கு

மதுரை: தவெக தலைவர் விஜய் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பில் பங்கேற்க கொடைக்கானல் செல்வதற்காக கடந்த மே 1 அன்று மதுரை விமான நிலையம் வந்தார்.  அப்போது, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியதால்,  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தொண் டர்கள் திரண்டது தொடர்பாக மூன்று பிரிவுகளின்கீழ் அவனி யாபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வருகைப் பதிவு வீழ்ச்சி

சென்னை: 2025 ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவு தேர்வில் இதுவரை இல்லாத அளவிற்கு மாணவர்களின் வருகை பதிவு சரிந்துள்ளது. முறைகேடுகளை தடுப்பதாக கூறி, தேர்வு மையங்களில் தேசிய தேர்வு முகமை மைய அதிகாரிகளின் உச்சபட்ச கெடுபிடிகளால், நீட் தேர்வுக்கு பெயரை பதிவு செய்தும், தேர்வுக்கு வருகை தராத மாண வர்களின் எண்ணிக்கை எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு  இம்முறை அதிகரித்துள்ளது.

நீட் தேர்வுக்கு விலக்கு  கிடைக்கும்: அமைச்சர்

சென்னை: “நீட் நுழைவுத் தேர்வு வந்த நாள் முதல் இதில் மோசடிகளும், குளறுபடிகளும் நடந்து வருகிறது. இந்த தேர்வை உச்சநீதிமன்றம் கண்டித்த பிறகும்கூட மாண வர்களின் மனநிலையை சீர்குலைக்கும் வகையில் ஒரு கொடு மையான தேர்வாக இருந்து வருகிறது. இந்த முறை தாலியை கழட்டி வைத்துவிட்டு தேர்வு எழுத வேண்டும் என்று  மாணவியிடம் வலியுறுத்தியது வரலாறு காணாத அத்துமீற லாகும். இப்படி நீட் தேர்வால் மாணவர்கள் பல அழுத்தங் களை சந்திக்க நேரிடுகிறது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பூர்வமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆனால்  இதற்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டையாக இருந்து வரு கிறது. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு நிச்சயம் விலக்கு பெறும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை” என்று  அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரி வித்தார்.

கல்வித் துறை அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள், ஆசிரியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் வெளியான 10 நாட்களுக் குள் பள்ளிகள், ஆசிரியர்கள் விவரங்களை வழங்க கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.