திருவள்ளூர்,டிச.12- மாண்டஸ் புயல் காரணமாக, திருத்தணி சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக காற்றுடன் கூடிய கனமழை கொட்டியது. இதன் காரண மாக, பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 2000 ஏக்கர் நெற்பயிர்கள் முற்றிலும் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதேபோல் கோணசமுத்திரம், பாலாபுரம், சந்திரவிலாசபுரம் உள்ளிட்ட பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் வேர்க்கடலை மிளகாய் ஆகிய பயிர்க ளும் நீரில் மூழ்கி வீணாகியுள்ளது. சேதமடைந்த பயிர்களை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.