tamilnadu

ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி அரசு கல்லூரியானது இந்திய மாணவர் சங்கத்தின் 13 ஆண்டு போராட்டம் வெற்றி

ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசு கல்லூரி யாக அறிவிக்கக்கோரி இந்திய மாணவர் சங்கம் கடந்த 13 வருடங்க ளுக்கு மேலாக  போராடி வருகிறது. கடந்த 2014  ஜுலை 14 அன்று பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் சார்பாக  மறைந்த பேராசிரியர் செந்தாமரை தலைமையில் பல்வேறு கோரிக்கை களுடன் சிஎன்சி கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவிக்கக் கோரி ஆர்ப் பாட்டம் ஈரோடு தலைமை தபால் நிலை யம் முன்பு நடந்தது. இதன் தொடர்ச்சி யாக ஜுலை 16 அன்று சிஎன்சி  கல்லூ ரியில் வகுப்பைப் புறக்கணித்து 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட் டத்தில் பங்கேற்றனர்.  சட்டமன்றத்தில்... அன்றைய தினம், சட்டமன்றத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த தோழர் கே. தங்கவேல் இதுகுறித்து கேள்வியை எழுப்பினார். அப்போது, உயர் கல்வித் துறை அமைச்சர் இது தொடர்பாக வழக்குகளின் நிலைமைகள் குறித்து அறிந்து அரசு பரிசீலிக்கும் என்றார். ஜுலை 17 ஆம் தேதியன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தின் எதிரொ லியாக சட்டமன்றத்தில், சிபிஎம் சட்ட மன்ற உறுப்பினர் வி.இராமமூர்த்தி கல்வி மானியக் கோரிக்கையின் போது இக்கல்லூரி குறித்து பேசினார். ஜுலை 18 ஆம் தேதியன்று, உண்ணா விரதப் போராட்டத்தை இந்திய மாண வர் சங்கம் மேற்கொண்டது, இதில், திராவிடர் கழக மாணவர் அமைப்பின ரும் பங்கேற்றனர்.  ஜுலை 22 ஆம் தேதியன்று இந்திய மாணவர் சங்கத்தின் முயற்சியினால் கல்லூரியில் ஒவ்வொரு துறையைச் சேர்ந்த மாணவர்களை உள்ளடக்கிய, 33 மாணவர்கள் கொண்ட போராட்டக் குழு ஏற்படுத்தப்பட்டது. போராட்டக் குழுக் கூட்டத்தில், 23-07-2014 முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. தயாரிப்பு வேலை களை கண்ட கல்லூரி நிர்வாகம், அரசு கல்லூரியை காலவரையின்றி மூடி உத்தரவிட்டது.  ஜுலை 23 அன்று 500 மாணவர்கள் கல்லூரியின் முன்பு, ஒன்று கூடி, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ்மோகன் தலை மையில் தர்ணா போராட்டம் நடத்தி னர். இதில், மூடிய கல்லூரியை திறக்க வேண்டும், அரசுக் கல்லூரியாக அறி விக்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை முன் வைத்து தொடர் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு தொ டர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதில், மாணவர் சங்கத்தின் மாநில, மாவட்ட தலைவர்கள் பங்கேற் றனர். ஜுலை 24 இல், கண்ணில் கருப்பு துணி அணிந்து போராட்டம், ஜுலை 25 அன்று 150க்கு மேற்பட்ட மாணவர் கள், கல்லூரி கதவிற்கு மாலை அணி வித்து போராட்டம், ஜுலை 27 அன்று  ஆர்ப்பாட்டம், ஜுலை 28 அன்று முக்காடு அணிந்து போராட்டம், ஜுலை 30 அன்று ஆர்ப்பாட்டம், ஜுலை 31 அன்று வகுப்பு புறக்கணிப்பு, ஆர்ப்பாட் டம் என தொடர் போராட்டங்கள் நடை பெற்றன. 

அரசு கல்லூரிக்கான  முதல் வித்து

இதேபோன்று, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மாற்றுத் திறனாளிகள் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு முற்போ க்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் உண் ணாவிரதம் நடைபெற்றது. காவல்துறை யினரின் அடக்குமுறையை மீறி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது.  ஆகஸ்ட் 4 இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில், பூட்டப்பட்ட, கல்லூரியை திறந்துகொண்டு படிக்கச் செல்லும் போராட்டம் நடைபெற்றது. இதில் 15 மாணவர்களை கைது செய்து கொண்டு சென்றது காவல்துறை. இதனைத்தொடர்ந்து  பேச்சுவார்த்தை கோட்டாட்சியர் முன்னிலையில் நடை பெற்றது. இதில், கல்லூரி முதல்வர் மற்றும் துணை முதல்வர், காவல் துறை அதிகாரிகள், மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதனையடுத்து, வருவாய் கோட்ட ஆட்சித் தலைவர் முன் பேசி எழுத்துப் பூர்வமான உடன்பாடு ஏற்பட்டது. இதில் கல்லூரியை உடனடியாக திறப்பது என்றும், அரசுக் கல்லூரியாக அறிவிக்க அரசிற்கு அறிக்கை அனுப்புவது எனவும் முடிவு செய்யப்பட்டது. முற்றுகைப் போராட்டம் ஆகஸ்ட் 4 அன்று கல்வி பாது காப்புக்குழு மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உண்ணாவிரதம், ஆகஸ்ட் 5 அன்று விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் உண்ணாவிரதம். கல்லூரி முன் முட்டி போட்டு ஆர்ப்பாட்டம் என தொடர்ந்து ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கும் போராட்டங்கள் நடந்து கொண்டே இருந்தன. ஆகஸ்ட் 8 முதல் காலவரையற்ற உண்ணா விரதம், அனைத்து பல்கலைக்கழ கங்கள் முன்பாகவும், சென்னையில் சட்டமன்றம் முன்பாகவும், மாணவர் சங்கத்தின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. மாநில  அளவில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சிஎன்சி கல்லூரி அரசுட மையாக்க வேண்டும் என்கிற கோரிக் கை பிரதானமாக முன்வைக்கப்பட்டது.  ஈரோடு சிஎன்சி கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் ஜுலை 16 முதல் ஆகஸ்ட் 10 வரை நடத்திய 26 நாட்கள் தொடர் போராட்டத்திற்கு பத்திரிகையாளர்கள், சிஐடியு தொ ழிற்சங்கங்கள், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு அளித்தன. 

சிபிஎம் தலைவர்கள்  கைது- வழக்கு

இந்திய மாணவர் சங்கத்தின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் 13 பேர் மீது அரசு வழக்கு தொடர்ந்தது. நான்கு வருடங்கள் நடைபெற்ற வழ க்கு, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத காரணத்தினால் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்திய மாணவர் சங்கத்தின்  தொடர் போராட் டங்களின் காரணமாக அடுத்தடுத்து வந்த முதல்வர்கள் சிஎன்சி கல்லூரி யை அரசுடமையாக்கிட வாக்குறுதி கொடுத்தனர்.  நிறைவாக இன்றைய திமுக அரசு அதற்காக கொண்டு வந்த சட்டதிருத்த மசோதா ஆளுநரின் தாமதத்தால் நான்கு வருடங்கள் முடங்கிக் கிடந் தது. இந்நிலையில் 4-02-25 அன்று சட்ட திருத்த மசோதாவிற்கு குடி யரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தி ருப்பதின் மூலம் சிஎன்சி கல்லூரி அரசு கல்லூரியாகிறது.  போராட்டங்கள் இல்லாமல் யாராட்டமும் செல்லாது....