சென்னை, மே 8- தேசிய அளவிலான கபடி போட்டி யில் பங்கேற்பதற்கு 12 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சென்னை அருகே தாம்பரத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டமாக மாநில அளவில் ஆடவர் கபடி போட்டி கள் நடைபெற்றது. தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் செங்கல்பட்டு அமெச்சூர் கபடி கழகம் சார்பில் நடைபெற்றது. இந்த போட்டியை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கிவைத்தார். அரையிறுதி போட்டியில், காஞ்சிபுரம் அணியை தோற்கடித்த கன்னியாகுமரி அணியும் கோவை அணியை வீழ்த்திய திருச்சி அணியும் இறுதி போட்டியில் விளையாடின. இந்த இறுதி போட்டியை ஓய்வு பெற்ற டிஜிபி ரவி, தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆகி யோர் துவக்கினர். 5 ஆயிரம் பார்வை யாளர்கள் முன்னிலையில் இந்த போட்டி நடைபெற்றது. கன்னியாகுமரி அணி 40 புள்ளி களுடன் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு கபடி சாம்பியன் கோப்பை, தங்கப் பதக்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசையும் தட்டி சென்றது. இரண்டாம் இடம் பிடித்த திருச்சி அணிக்கு கோப்பையுடன் வெள்ளி பதக்கமும் ரூ.30 ஆயிரம் பணமும் வழங்கப்பட்டது. 3 ம் இடம் பிடித்த காஞ்சிபுரம் மற்றும் கோவை அணி களுக்கு கோப்பைகளுடன் வெண்கள பதக்கமும் தலா ரூ.15 ஆயிரம் பண மும் பரிசாக வழங்கப்பட்டது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கபடி போட்டிகளில் குறிப்பிட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, 12 பேர் தேசிய அளவிலான போட்டிகளில் பங்குபெரும் வாய்ப்பை பெற்றனர்.