இராமநாதபுரம், ஜன.5- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் ஜனவரி 5 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளி யிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையேற்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிர முகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். பின்னர் ஆட்சியர் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரம், திருவாடனை, பர மக்குடி, முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 1371 பாகங்கள் அடங்கிய சட்டமன்ற தொகுதிகளுக்கு 5,75,546 ஆண் வாக்காளர்களும், 5,81,268 பெண் வாக்காளர் களும், 68 மூன்றாம் பாலினத்தவர்களும் என ஆக மொத்தம் 11,56,882 வாக்காளர்கள் உள்ளனர். இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வாக்குப்பதிவு அலுவலர்கள், உதவி வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலை பொதுமக்கள் அனைவரும் சரிபார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆம. காமாட்சி கணேசன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பரமக்குடி (தனி) தொகுதியில் 2 லட்சத்து 51 ஆயி ரத்து 937 பேர், திருவாடானையில் 2 லட்சத்து 88 ஆயிரத்து 463 பேர், இராமநாதபுரத்தில் 3 லட்சத்து 8 ஆயிரத்து 490 பேர், முதுகுளத்தூர் தொகுதியில் 3 லட்சத்து 7 ஆயிரத்து 992 பேர் என மொத்தம் 11 லட்சத்து 56 ஆயிரத்து 882 வாக்காளர்கள் உள்ளனர்.