tamilnadu

img

புதிதாக 11 மின்பகிர்மான கோட்டங்கள் தொடக்கம்

சென்னை,டிச.15- தமிழ்நாட்டில் 11 இடங்களில் புதிதாக 11 இடங்களில் மின்பகிர்மான கோட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழனன்று (டிச.15) தொடங்கி வைத்தார்.  தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் ஏற்கனவே 176 கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. மின் இணைப்புகள், பணிகளில் சமநிலை  இல்லாத நிலை இருந்து வருகிறது.  உதாரணமாக, தாம்பரம் கோட்டத்தில் அதிகபட்சமாக 6,79,239 மின் இணைப்பு களும், கூடலூர் கோட்டத்தில் குறைந் தபட்சமாக 68,022 இணைப்புகளும் உள்ளன.  எனவே, கோட்டங்களுக்கு இடை யேயான மின் இணைப்புகளை சம நிலைப்படுத்தவும், நிர்வாக பிரச்சினை களை தீர்க்கவும், பொது மக்களின் புகார்களின் மீது உடனடி  தீர்வு காண்தற்கும் கூடுதலாக சென்னை சேப்பாக்கம், சோழிங்க நல்லூர், பல்லாவரம், தேன்கனிக் கோட்டை, பென்னாகரம், திரு வெண்ணைநல்லூர், ஊத்துக்குளி, வேடசந்தூர், ஜெயங்கொண்டம், சாத்தூர், கெங்கவள்ளி ஆகிய இடங்களில் புதிதாக 11 மின் பகிர் மான கோட்டங்களை முதலமைச்சர் தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் க. பொன்முடி, செந்தில்பாலாஜி,  உதய நிதி ஸ்டாலின்,  உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.