நாட்டில் தற்போது மிக முக்கிய பிரச்சனையாக இருப்பது கணினிவழி குற்றங்கள் (சை பர் கிரைம்) ஆகும். சாதாரண பொது மக்களின் கேஒய்சி மூலமும், ஏடிஎம் கட வுச்சொல் மூலமாக வும், அரசு மற்றும் அரசுசாரா நிறுவ னங்களின் சாப்ட்வேர் களை ஹேக்கிங் செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன. மேலும் கிரிப்டோகரன்சி மோசடி, டிஜிட்டல் கைது போன்ற சம்பவங்களும் நாட்டில் மிக அதிகமாக நிகழ்கின்றன. இந்திய சைபர் குற்ற ஒருங்கி ணைப்பு மையத்தின் கூற்றுப்படி, 2024ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்க ளில் (ஜனவரி முதல் ஜூன் வரை) சைபர் மோசடி மூலம் 11,000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டதாக செய்தி கள் வெளியாகியுள்ளன. மேலும் தேசிய சைபர் குற்ற ஆவண காப்பகத்தின் இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் 6,000 புகார்கள் பதிவு செய்யப்படுவ தாகவும், சராசரியாக ஒவ்வொரு நாளும் 60 கோடி ரூபாயை இந்தியர்கள் இழக்கின் றனர் என கூடுதல் தகவலும் வெளியாகி யுள்ளது. இந்த ஆண்டில் நடந்த மோசடிகளில் மிகவும் அச்சுறுத்தும் மோசடியாக இருப்பது டிஜிட்டல் கைது மோசடி ஆகும். இந்த வகையிலான மோசடியில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து, பொய்யான குற்றச் சாட்டுகளில் சிக்க வைப்பதாக அச்சுறுத்து கின்றனர். இந்த மிரட்டல் மூலம் சம்பந்தப் பட்டவர்களிடம் இருந்து பெரும் தொகையை பறிப்பது வாடிக்கையான சம்பவமாக மாறிவிட்டது. 2024ஆம் ஆண்டில் மட்டும் ஆசிய அளவில் இணைய மோசடிகளால் 57.1 லட்சம் கோடி அளவிலும் உலகளவில் 85.49 லட்சம் கோடி ரூபாய் அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.