10ம் வகுப்பு பொதுத்தேர்வு
புதுச்சேரியில் 96.90 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி
புதுச்சேரி, மே16- புதுச்சேரியில் தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் கடந்த மார்சில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. அனைத்து அரசு பள்ளிகளும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ள நிலை யில், தனியார் பள்ளிகளை சேர்ந்த மாண வர்களுக்கு மட்டும் தமிழ்நாடு பாடத்திட்ட த்தின் படி 10ம் வகுப்பு தேர்வை எழுதி னார்கள். புதுவை, காரைக்காலை சேர்ந்த 4 ஆயிரத்து 290 மாணவர்கள், 3 ஆயிரத்து 977 மாணவிகள் என மொத்தம் 8 ஆயிரத்து 267 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் தனியார் பள்ளிகளில் படித்த 4 ஆயிரத்து 109 மாணவர்கள், 3 ஆயிரத்து 902 மாணவிகள் என மொத்தம் 8 ஆயிரத்து 11 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுவை, காரைக்காலில் 96.90 விழுக்காடு தேர்ச்சியாகும். புதுவை, காரைக்காலில்10ம் வகுப்பு தேர்வில் 113 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரி பிள்ளைச்சாவடியில் உள்ள சமூகநலத்துறையின் கீழ் இயங்கும் ஆனந்த ரங்கப்பிள்ளை அரசு சிறப்பு மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்று 100க்கு 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ள னர் என்பது குறிப்பிடத்தக்கது.