tamilnadu

img

காவிரி டெல்டாவுக்கு ரூ.1000 கோடி வேளாண் தொழில் பெருந்தடம்

சென்னை, மார்ச் 21- காவிரி டெல்டாவில் அடுத்த ஐந்தாண்டு களில் 1000 கோடி ரூபாயில் வேளாண்  தொழில் பெருந்தட திட்டம் செயல் படுத்தப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வா யன்று(மார்ச் 21) காலை 10 மணிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, “எத்தனை  தொழில்கள் செழித்து வளர்ந்தாலும், மனிதனின் அடிப் படைத் தேவை உணவேயாகும்.  மகத்தான மனிதர்களும் உணவு சற்று தாமத மானால், உணர்ச்சிவசப்படுவதைப் பார்க் கிறோம்.  உணவுக்கும், உணர்வுக்கும் தொடர்புண்டு.  ‘பசி வருகிறபோது அனைத் தையும் மனிதன் இழந்து விடுகிறான்’ என்று தமிழ் மூதாட்டி ஒளவையார் குறிப் பிட்டதை சுட்டிக்காட்டினார். மேலும் சங்க இலக்கியப் பாடல்களை மேற்கோள் காட்டி  வேளாண்மை மாண்பினை எடுத்துக் கூறினார். 

தனித்து இயங்காது விவசாயம்!

வேளாண்மை என்பது தனித்து இயங்காது. வெறும் நெல்லை மட்டும் அறுவடை செய்து, வயிற்றை நிரப்ப இய லாது. அதைச் சேமித்து வைக்க அறிவிய லின் துணை தேவை. அரைக்க பொறியிய லின் ஒத்தாசை தேவை. வேக வைக்க  தொழில் துறையின் உதவி தேவை. அதில் காய்கறிகளைப் பரிமாற தோட்டக்கலைத் துறை தோள் கொடுக்க வேண்டும். அதில்  வாசனைப் பொருட்களைச் சேர்க்க மலைப் பயிர்கள் துறை கரம் நீட்ட வேண்டும்.  சுவை யாக அதைப் படைக்க உப்பு சேர்க்க குறு, சிறு நடுத்தரத் தொழில்கள் துறை கை கொடுக்க வேண்டும். இறுதியில், மோரையோ, தயிரையோ ஊற்றி உணவை நிறைவு செய்ய, கால்நடை பராமரிப்புத் துறையின் செயல்பாடு தேவை. இவை யெல்லாம் உண்பதற்கே தேவைப் பட்டால், உற்பத்தி செய்வதற்கு எத்தனை துறைகள் அவசியம் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும்” என்பதையும் சுட்டிக்காட்டினார்.

நம்மாழ்வார் விருது

இது நாள் வரை, நெல் சாதனையாளர் களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட பரிசு, மற்ற பயிர்களுக்கும் விரிவுபடுத்தப் பட்டிருக்கிறது. ஏற்கெனவே தமிழ்நாடு அரசு சிறுதானியங்களைப் பரவலாக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வரு கிறது. தமிழ்நாடு முதலமைச்சரால் குடி யரசு தினவிழாவில் ‘நம்மாழ்வார்’ பெய ரால் விருது வழங்கப்படும் என்றும் கூறி னார். நீர் நிலைகள் நிரம்புவதும், சிற்றூர் களின் கட்டமைப்புகள் பெருகுவதும், வேளாண் பொருட்களைச் சந்தைப்படுத்து வதும், உழவர்களின் வருவாயைப் பெருக்கும் உத்தியாக இருக்கும். இவற்றை யெல்லாம் இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் வைத்திருக்கிறோம். எல்லா திட்டங்களும் ஒன்று சேர்ந்தால்தான் வேளாண்மை மகத்தான வளர்ச்சி பெற முடியும் எனவும் தெரிவித்தார். சென்ற வேளாண் நிதிநிலை அறிக்கை யில் திருச்சி-நாகப்பட்டினத்திற்கு இடைப்பட்ட பகுதி வேளாண் தொழில் பெருந்தடமாக அறிவிக்கப்பட்டு, காவிரி டெல்டா மாவட்டங்களில், உழவர்களுக்கு அதிக வருமானம் ஈட்டவும், இளைஞர் களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு களை உருவாக்கவும், வேளாண் தொழில் பெருந்தடத்தை அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வேளாண் சார்ந்த உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளைத் தொடங்க முன் வரும் தொழில் முனை வோருக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத் தொகுப்பும், சந்தை இணைப்புகள், வல்லு னரின் வழிகாட்டுதல்கள், ஒற்றைச் சாளர  முறை வசதிகள் உருவாக்கித் தரப்படும்.  சேமிப்பு, பதப்படுத்துதல், சந்தைப்படுத்து தலை திறம்பட மேற்கொள்ளும் வகை யில். பொது வசதிகளுடன் புதிய தொழிற்  பேட்டைகள் உருவாக்கப்படும்.  காவிரி டெல்டா பகுதிகளில் வேளாண் தொழில்நுட்ப புத்தொழில்களை வளர்ப்பதற்காக தஞ்சாவூரில் புதிய வட்டார புத்தொழில் மையம் ஒன்று தமிழ் நாடு புத்தொழில்-புத்தாக்க இயக்கம் மூலம் உருவாக்கப்படும். இந்த வேளாண் தொழில் பெருவழி தடத்தின் மூலம் வேளாண்மை சார்ந்த பல்வேறு துறை களின் திட்டங்களை ஒருங்கிணைத்துத் திறம்பட செயல்படுத்தும் வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில்  1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேளாண் தொழில் பெருந்தட திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் பன்னீர்செல்வம் தெரி வித்தார்.