tamilnadu

img

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு 10 சக்கர நாற்காலிகள்..... பொது இன்சூரன்ஸ் பென்சனர்ஸ் சங்கத்தினர் வழங்கினர்...

மதுரை:
மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர் சங்கம் சார்பில்  மதுரைஅரசு ராஜாஜி மருத்துவமனைக்கு 10 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்களின் ஒப்பற்ற பணி போற்றுதலுக்குரியது. இந்நிலையில் பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பயன்படும் வகையில், 10 சக்கர நாற்காலிகளை ஜூலை 7 அன்று மருத்துவமனை முதல்வரிடம் வழங்கி னர். இந்நிகழ்ச்சியில் மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர் சங்க நிர்வாகிகள், மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர் என்று மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர் சங்க பொதுச்செயலாளர் த.கோபால்ராஜ் தெரிவித்துள்ளார்.

;