சென்னை, ஏப்.26- சென்னையில் வசிக்கும் பொதுமக்களுக்காக தின மும் 10 லட்சம் கிலோ தக்காளி தேவைப்படுகிறது.சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங் கள் மற்றும் ஆந்திரா, தெலுங் கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளி வருகிறது. தற்போது தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அதிக அளவில் தக்காளி வரு கிறது. தினமும் 12 லட்சம் கிலோ தக்காளி வருகிறது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை குறையத் தொடங்கி உள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்கப்பட்டது. இந்த நிலை யில் தற்போது தக்காளி விலை கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லரை கடைகளில் 1 கிேலா ரூ.15-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் மற்ற காய்கறி களின் விலையும் குறை வாகவே உள்ளது.