சென்னை, ஜன.18- தற்போதைய பிரதமர் மோடியை சர்வாதிகாரி ஆக்கவே, ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு கையில் எடுத்துள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். திமுக சட்டத்துறை மாநாட்டில் பங்கேற்று பேசுகையில் இதுதொடர் பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: “பாஜகவின் செயல்திட்டம் பெரும்பாலும் குறுகியகால செயல் திட்டமாக இருக்காது, நீண்டகால செயல்திட்டமாகத்தான் இருக்கும். இப்போது நாடு முழுவதும் ஒரே நேரத் தில் தேர்தல் நடத்துவோம் என்று சொல்பவர்கள், காலப்போக்கில் நாட் டுக்கே ஒரே தேர்தல் என்று சொல்லும் நிலையை உருவாக்க நினைக்கிறார்கள். இது ஒற்றை ஆட்சிக்குத்தான் வழி வகுக்கும். இது தனிமனிதர் ஒருவ ரிடம் அதிகாரத்தைக் கொண்டுபோய்ச் சேர்க்கும். பாஜக என்ற கட்சிக்கே கூட இது நல்லதல்ல. இன்று பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியை சர்வாதி காரி ஆக்கவே ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் பயன்படும். பாஜகவும், பாஜகவுக்கு மூளை யாக இருந்து செயல்படும் அமைப்பு களும் விரிக்கக் கூடிய வலையில், அரசியல் காரணங்களுக்காக பாஜக வை ஆதரிக்கும் கூட்டணி கட்சிகள் விழுந்துவிடக் கூடாது. அவர்கள் இந்த சட்டத்தை ஆதரிக்கக் கூடாது என நான் கோரிக்கை வைக்கிறேன். பாஜகவை ஆதரிப்பது உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால் இந்தி யாவின் கூட்டாட்சி கருத்தியலுக்கு முர ணான சட்டங்களை மக்களாட்சி மீது நம்பிக்கை வைத்திருக்கும் எந்த அரசி யல் கட்சிகளும் ஆதரிக்கக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இந்திய அரசி யலமைப்பின் கூட்டாட்சி கருத்திய லுக்காக ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ சட்டத்தை நாம் இறுதிவரை எதிர்க்க வேண்டும்.” இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசி யுள்ளார்.