தஞ்சாவூர், நவ.30 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழ கத்தில் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் 9 பேருக்கு கரி காற்சோழன் விருது வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் அயல் நாட்டு தமிழ் கல்வித்துறை, சிங்கப் பூர் முஸ்தபா அறக்கட்டளை இணைந்து நடத்திய இந்நிகழ்விற்கு, பல்கலைக்கழக துணைவேந்தர் திரு வள்ளுவன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயல் நாட்டு தமிழ் கல்வித்துறையில் உள்ள சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை சார்பில் 2007 ஆம் ஆண்டு தமிழ் வேள் கோ.சாரங்கபாணி ஆய்வி ருக்கை நிறுவப்பட்டது. இதன் மூலம் ஆண்டு தோறும் இலங்கை, சிங்கப் பூர், மலேசியா நாடுகளில் வெளி வரும் சிறந்த தமிழ் படைப்புகளை தேர்வு செய்து ‘கரிகாற்சோழன் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் வழங்கப்பட்டு வரும் இந்த இலக்கிய விருதை தமிழ்ப் பல்க லைக்கழகம் ஒருங்கிணைத்து வழங் குகிறது” என்றார்.
நிகழ்ச்சியில், இலங்கையைச் சேர்ந்த தி.ஞானசேகரன் (2018), அச்சி முகமது (2019), அருணா செல்லத் துரை (2020), சிங்கப்பூரைச் சேர்ந்த அ.இன்பா (2018), ஹேமா (2019), எம்.சேகர் (2020), மலேசியாவைச் சேர்ந்த ஏ.எஸ்.பிரான்சிஸ் (2018), மா.அன்பழகன் (2019), கோ.புண்ணி யவான் (2020) ஆகியோருக்கு தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் விருதுகளை வழங்கினார். விழா வுக்கு நேரில் வர இயலாத சிலருக்கு உறவினர்களிடம் விருது வழங்கப் பட்டது. அயல்நாட்டு கல்வித்துறை இணைப் பேராசிரியர் பழனிவேலு, உதவிப் பேராசிரியர் வெற்றிச்செல் வன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விழாவில் திரைப்பட பாடல் ஆசிரி யர்கள் நெல்லை ஜெயந்தா, சினே கன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பதிவாளர் தியாகராஜன், சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை நிறு வனர் சிங்கப்பூர் முஸ்தபா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். முன்ன தாக அயல்நாட்டு தமிழ் கல்வித்துறை தலைவர் குறிஞ்சி வேந்தன் வர வேற்க, ஷாநவாஸ் நன்றி கூறினார். கொரோனா பெருந்தொற்று கார ணமாக 3 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த விழா நடைபெற்றது குறிப்பி டத்தக்கது. இதில், இலங்கை, மலே சியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வெளிவந்த சிறந்த படைப்புகளுக்கு 2018, 2019, 2020 ஆம் ஆண்டுகளுக் கான பரிசுகள் வழங்கப்பட்டன.