tamilnadu

img

2019-ல் மகாராஷ்டிராவில் 12,147 குழந்தைகள் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில்,  கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12,147 குழந்தைகள் உயிரிழந்ததாக அம்மாநில அரசு இன்று தெரிவித்தது. 

ஐநாவின் உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பிறக்கும் போது 2.5 கிலோவிற்கும் குறைவான எடையுள்ள குழந்தைகள், குறைந்த பிறப்பு எடை பிரிவின் கீழ் வருகின்றன. இதுவே குழந்தை இறப்புகளுக்கு முதன்மையான காரணங்களில் ஒன்றாகும்.

சுகாதார மேலான்மை தகவல் அமைப்பின் அறிக்கையை மேற்கோள் காட்டி பேசிய சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப், 2018-19 ஆம் ஆண்டில் 1.5 கிலோவிற்கும் குறைவான எடையில் 2,11,772 குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்களில் 22,179 பேர் மும்பையில் பிறந்தவர்கள். எச்.எம்.ஐ.எஸ் அறிக்கையின்படி 13,070 குழந்தைகள் குழந்தைப் பருவத்திலேயே இறந்தனர். இதில் 1,402 இறப்புகள் மும்பையில் பதிவாகியுள்ளதாக அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

அதே போல், கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 31 வரை, அம்மாநிலத்தில் 12,147 குழந்தை இறப்புகள் பதிவாகியுள்ளன. அதே காலகட்டத்தில் 11,066 பச்சிளம் குழந்தைகள் இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.