மகாராஷ்டிராவில் கோவிட்-19 சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர், கழிவறையில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன் 1-ஆம் தேதியன்று, 82 வயது முதியவர் ஒருவர் கோவிட்-19 தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் திடீரென கடந்த ஜூன் 2-ஆம் தேதி, அவர் மயமாகியுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் 10-ஆம் தேதியன்று, மருத்துவமனை கழிவறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக புகார் வந்ததையடுத்து திறந்து பார்த்தபோது அந்த முதியவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இதை அடுத்து, மருத்துவமனையில் நோயாளிகளை முறையாக பராமரிக்க தவறியதற்காக அந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர்கள் ஐந்து பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.