tamilnadu

img

மும்பையில் லாரி மோதியதில் 4 பேர் பலி; ஒருவர் படுகாயம்

மும்பையில் சாலையின் ஓரத்தில் சாக்கடை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது லாரி மோதியதில் 4 பேர் பலியாகினர் மற்றும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.


மும்பையின் விக்ரோலி பகுதியில் சூர்யா நகர் செல்லும் சாலையில் சாக்கடையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 5 பேர் மீது அங்கிருந்த வளைவில் திரும்பிய லாரி கவிழ்ந்து மோதியது. இதில் அஸ்வின் ஹிவரே, விசால், அப்துல் ஹமீது சேக் மற்றும் சந்திரசேகர் என்ற 4 தொழிலாளர்கள் பலியாகினர். ஹாசன் சேக் என்ற தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்தார். தற்போது ஹாசன் சேக் தற்போது ராஜாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நகராட்சி நிர்வாகம் சரியான முறையில் சாக்கடையை அடைக்காததே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.


இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் துணை காவல் ஆணையர் அகிலேஷ் குமார் சிங் கூறியுள்ளார்.


;