மநுஸ்மிருதி விவகாரத்தில் அமிதாப்பச்சன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சோனி தொலைக்காட்சியில் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியின் 12 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் அமிதாப்பச்சன் தொகுத்து வழக்கி வருகிறார். இந்த விளையாட்டில் சமூக ஆர்வலர் பெசவாடா வில்சன் மற்றும் அனூப் சோனி ஆகியோர் அக்டோபர் 30 தேதி நடந்த எபிசோரில் பங்கேற்றனர். அப்போது 1927 டிசம்பர் 25 ஆம் தேதி டாக்டர் பி.ஆர் அம்பேத்கரும் அவரது ஆதரவாளர்களும் எந்த நகலை கொளுத்தினர் என 6.40 லட்சம் ரூபாய்க்கான கேள்வியை அமிதாப்பச்சன் கேட்டார். விஷ்ணு புராணம், பகவத்கீதை, ரிக்வேதம்,மனுஸ்மிருதி என 4 விடைகளும் கொடுக்கப்பட்டன. இதற்கு சரியான பதில் மனுஸ்மிருதியாகும்.
இது குறித்து விளக்கிய அமிதாப்பச்சன் 1927ம் ஆண்டு சாதி பாகுபாடு மற்றும் தீண்டாமையை கருத்தியல் ரீதியாக நியாயப்படுத்திய பண்டைய இந்து நூலான மநுஸ்மிருதிக்கு அம்பேத்கர் கண்டனம் தெரிவித்தார். அதன் பிரதிகள் எரிக்கப்பட்டன என தெரிவித்தார்.
இது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவது போல இருப்பதால் அமிதாப்பச்சன் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏ அபுமன்யு பவார், லத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம் புகார் அளித்தார்.
இதன் பேரில் அமிதாப் பச்சன், சோனி டிவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.