மும்பை,அக்.24- மகாராஷ்டிரா ,அரியானா ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 21 அன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் 61.13 சதவீத வாக்கு களும், 90 இடங்களைக் கொண்ட ஹரியானாவில் 68 சதவீத வாக்குகளும் பதிவாகின. இந்த இரண்டு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை வியாழனன்று நடைபெற்றது.இதில் மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி102 இடங்களில் வெற்றிபெற்றது. மற்ற வர்கள் 27 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். 90 தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் 31 இடங்களிலும் பாஜக கூட்டணி 40 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ள்ளன. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் யார் ஆட்சி அமைப்பது என்பது இழுபறியில் உள்ளது.