மும்பை:
மகாராஷ்டிராவில் பாஜக எம்எல்ஏ ஒருவருக்குச் சொந்தமான பள்ளியில் சிறுவர்களுக்கு துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட ஆயுதப் பயற்சி அளிக்கப் பட்டதாக புகார் எழுந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் தானேயில், மிரா சாலையில் பாஜக எம்எல்ஏ நரேந்திர மேத்தாவுக்குச் சொந்தமான ‘செவன் லெவன் அகாடமி’ என்ற பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியில் சிறுவர் மற்றும் இளைஞர்களுக்கு ஆயுதப் பயற்சி அளிக்கப்பட்டதாக முகநூலில் பதவிடப்பட்டு உள்ளது.
பிரகாஷ் குப்தா என்பவர், இது தொடர்பாக சில புகைப்படங்களைப் பகிர்ந்து மே 25 முதல் ஜூன் 1 வரை இந்தப் பயிற்சி வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். பஜ்ரங் தளம் அமைப்பு இந்தப் பயிற்சியை அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார். துப்பாக்கி ஏந்திய நிலையில் இளைஞர்களும் சிறுவர்களும் பயிற்சி எடுப்பது, படத்தில் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து, பாஜக எம்எல்ஏ-வின் பள்ளியில் நடந்த ஆயுதப்பயிற்சி தொடர்பாக, நவ்கர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.