tamilnadu

img

மும்பை-புனே நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து- 5 பேர் பலி

மும்பை புனே நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
புனேவில் தலேகான் தபாடே (Talegaon Dabhade) பகுதியைச் சேர்ந்த 6 பேர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, ஒருவர் சிறுநீர் கழிக்கச் செல்லவே, மற்ற 5 பேரும் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் எதிரே வந்த லாரி வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் அங்கு நின்று கொண்டிருந்த 5 பேரும் லாரியின் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஒருவர் சிறுநீர் கழிக்கச் சென்றதால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து  லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.