மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பஜாஜ் தொழிற்சாலையில், கோவிட்-19 தொற்றால், ஊழியர்கள் 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் மரணமடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,52,765 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7,106 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், அம்மாநிலத்தின் அவுரங்கபாத்தில் அருகே உள்ள வாலுஜ் பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலையில், 140 ஊழியர்களுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதும், இருவர் கோவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதும் உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தொழிற்சாலையில், கிருமி நீக்கம் செய்ய, அடுத்த 2 நாட்களுக்கு தொழிற்சாலை மூடப்படும் என்று அவுரங்கபாத் மாவட்ட ஆட்சியர் உதய் சௌத்ரி தெரிவித்துள்ளார்.