மகாராஷ்டிராவின் துலே பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் பலியாகி உள்ளதாகவும், 58 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மூத்த போலீசார் கூறுகையில், ”மகாராஷ்டிராவின் துலே பகுதியில் உள்ள வாகடி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இன்று காலை 9.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தின் போது ஆலைக்குள் சுமார் 100 தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். தற்போது வரை 13 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 58க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள துலே சிவில் மருத்துவமனையிலும், ஷிர்பூர் காட்டேஜ் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அப்பகுதியில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றது.” எவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவின் முதல்வர் தேவேந்திர ஃபட்நவீஸ் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.