tamilnadu

பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை குறைவால் விவசாயிகள் வேதனை

பொள்ளாச்சி, ஆக 1- பொள்ளாச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் பருவ மழை போதியளவு பெய்யாததன் காரணமாக அப்ப குதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி களிலும் கடந்த ஜூன் மாதத் துவக்கத்தில் அவ்வப் போது பருவமழை பெய்தது. ஆனால், ஜூலை மாதத் தில் இரண்டு வாரமாக மட்டும் மழை பெய்தது. அதன் பின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை சரியாக பெய்யவில்லை.

இதன் காரணமாக, கிராமப்புறங்களில் உள்ள தடுப்பணைகளில் தண் ணீர் வரத்து குறைந்து வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில், வடக்கு மற்றும் தெற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல கிராமங்களில் உள்ள பல தடுப்பணைகளில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப் பட்டது மேலும், தண்ணீர் கசிவதைத் தவிர்க்க கான் கிரீட் தளம் அமைக்கப்பட்டது. இருப்பினும், இந்த முறை தென்மேற்குப் பருவமழை பொய்த்துப் போன காரணத்தால் தடுப்பணைகளுக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.