புகாரளித்த சமூக ஆர்வலர்களுக்கு மிரட்டல்
கோவை, செப். 29 கோவை தடாகம் பகுதியில் செங் கல் சூளைகளுக்காகச் சட்ட விரோத மாக மண் எடுப்பதை தடுக்க கோரி வழக்கு தொடுத்த சமூக ஆர்வலர் வீட்டிற்குள் புகுந்து சூளை அதிபர்கள் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், தடாகம் பகு தியில் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரையொட்டிய பகுதியில் செங் கல் சூளைகளுக்காக மண் வெட்டி எடுக்கப்படுகிறது. இதில் அரசின் விதிமுறைகளை மீறி பல்வேறு முறை கேடுகள் நடப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதராங்களுடன் தொடர்ச்சியாக சமூக ஆர்வலர்கள் மனு அளித்து வரு கின்றனர். இதனையடுத்து சம்பந்தப் பட்ட இடங்களை ஆய்வு செய்து நட வடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், செங்கல் சூளைகள் மண் எடுப்பதை கட்டுப்படுத்த வேண் டும் என்கிற கோரிக்கையை வலியு றுத்தி கோவை தடாகம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு வருகிற அக்டோபர் 10 ஆம் தேதியன்று விசார ணைக்கு வர உள்ளது. இந்த நிலை யில், வழக்கை தொடர்ந்த தடாகம் பகு தியை சேர்ந்த கணேஷ் என்பவர் தனது மனைவி மற்றும் தாயாருடன் வீட்டில் இருந்த போது நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளை அதிபர்களும் அவர்க ளது ஆதரவாளர்களும் வீட்டை முற் றுகையிட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் வழக்கை திரும்ப பெற வேண்டும் என்றும், இல்லை என்றால் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் கணேஷ் மற்றும் அவரது குடும்பத்தி னரை மிரட்டியுள்ளனர். இது தொடர் பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில், மிரட்டல் தொடர் பாக கணேஷ் காவல்துறையில் புகார் அளிக்க முடியாத நிலையில், சூளை அதிபர்களின் ஆதரவாளர் கள் வழியில் நின்று மிரட்டுவதாக கணேஷ் குற்றம்சாட்டியுள்ளார். இதேபோல், வழக்கு தொடுத்த ராஜேந்திரன், மருத்துவர் ரமேஷ் ஆகியோருக்கும் செங்கல் சூளை அதி பர்கள் தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்து வருகின்றனர். இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்கிற குரல் உலகளவில் வலுவாக எழுந்துள்ள சூழலில், இயற் கைக்கு விரோதமாக தடாகம், தொண் டாமுத்தூர் பகுதிகளில் மண் கடத்தல் தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சமூக ஆர்வ லர்களை மிரட்டி ஒடுக்கும் சூளை அதிபர்களின் நடவடிக்கை அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு சட்ட விரோத மண் கடத்தலை தடுக்கவும், செங்கல் சூளை களை முறைப்படுத்தவும், சமூக ஆர் வலர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது. மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சமூக ஆர்வலர்க ளும் ஒன்றிணைந்து தடாகம் பகுதியில் சட்டவிரோத மண் கடத்தலுக்கு எதி ராக மிகப்பெரிய போராட்டத்தில் ஈடு படுவதற்கான தயாரிப்பு நடவடிக்கை யில் ஈடுபட உள்ளதாக சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.