தரங்கம்பாடி, மே 6- தரங்கம்பாடி வட்டம் திருக்களாச்சேரி கிரா மத்தில் வசித்து வருகின்ற சலாவுதீன் என்பவ ரின் மனைவி ஷகிலா என்பவருக்கு பிரசவ தேதி இம்மாதம் முதல் வாரத்தில் குறிக்கப்பட் டிருந்தது. பிரசவம் பார்க்க, கொரோனா தொற்று இல்லை என்ற பரிசோதனை செய்வ தற்கு மயிலாடுதுறை அரசு மருத்துவம னைக்கு கடந்த வாரம் சென்றனர். ஆனால், கொரோனா நோயாளிகளின் பரி சோதனைக்கு உள்ளவர்களை கண்காணிப்ப தால் கர்ப்பிணியான ஷகிலாவிற்கு தொடர்ந்து பரிசோதனை செய்ய முடியாத நிலையில் பிர சவிக்கும் நாள் நெருங்கிய நிலையில் தாய், சேய் ஆகியோரை காப்பாற்ற அவரது உறவி னர் வெளிநாட்டிலிருந்து நாகை ஆட்சியரை அலைபேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து தெரிவித்தார். உடனே ஆட்சியர் பிரவீன் நாயர் உத்தர வின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் லியா கத் அலி, மயிலாடுதுறை அரசு மருத்துவ மனை முதன்மை மருத்துவ அதிகாரி ராஜ சேகரை தொடர்பு கொண்டு கர்ப்பிணி பெண்ணிற்கு உடனடியாக கொரோனா பரி சோதனை செய்து நோய்த் தொற்று இல்லை என சான்று வழங்கி மருத்துவமனையில் அனு மதித்து பிரசவம் பார்க்கப்பட்டதால் அறுவை சிகிச்சை மூலம் அப்பெண்ணுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. மாவட்ட ஆட்சியரை அணுகவும் மருத்துவ அதிகாரிகளை உடன் அணுகிட உதவி செய்த தொழிலதிபர் அரங்கை அர்ஷத், ஹாஜா, வேலம் முஜிபுர் ரகுமான் அறுவை சிகிச்சைக்கு தேவையான ரத்தத்தை ஏற்பாடு செய்த செம்பை தமுமுக ஒன்றிய செயலாளர் பீர் முஹம்மது, முன்னாள் மாவட்ட தலைவர் ஆரிப் உள்ளிட்டோர் மற்றும் உடனடி நடவ டிக்கை எடுத்த ஆட்சியர் பிரவீன் நாயர் மற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு சம்பந்தப்பட்ட குடும்பத்தினரும், பொதுமக்களும் நன்றி தெரி வித்தனர்.