tamilnadu

img

15 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் அவலம் சாக்கடையாக மாற்றப்பட்ட சத்தியவான் பாசன வாய்க்கால்

தரங்கம்பாடி, ஆக.1- 30-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நீர் ஆதாரமாக விளங்கிய பாசன வா ய்க்கால் ஒன்று கடந்த 15 ஆண்டுக ளுக்கும் மேலாக சாக்கடை நதியாக ஓடு கிறது. மயிலாடுதுறையிலிருந்து பிரிந்து  மன்னம்பந்தல், ஆறுபாதி, பரசலூர்,  செம்பனார்கோவில், மடப்புரம், ஆக்கூர், கிடங்கல், மருதம்பள்ளம் வழி யாக சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்க ளுக்கு செல்கிற, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் பாசன வாய்க்காலாக, லட்சக்கணக்கான மக்களின் நீர் ஆதாரமாக விளங்கிய சத்தியவான் பாசன வாய்க்கால் தற்போது சாக்கடையாக மாறியுள்ளது. கடந்த 2003-ல் மயிலாடுதுறையில் ரூ.42 கோடி மதிப்பீட்டில் பெரும் ஊழலு டன் அமைக்கப்பட்ட பாதாள சாக்க டைத் திட்டம் முறையாக செயல்படு த்தப்படாமல், கழிவுநீரை சுத்திகரிக்க உள்ளதாக கூறி, பல கிராமங்களின் தாகம் தீர்த்த பாசன வாய்க்காலில் ஒட்டு மொத்த கழிவுநீரையும் விட தொடங்கி னர். தற்போது 15 ஆண்டுகளை கடந்தும்  பாசன வாய்க்காலில் மலக்கழிவுகளும், சாக்கடை கழிவுகளுமே ஓடுகிறது.

எண்ணற்ற போராட்டங்களை பல்வேறு தரப்பினர் நடத்திய பிறகும் அதிகாரி கள் கண்டுக் கொள்ளவே இல்லை  என்பது வேதனையிலும் வேதனை. இந்த  வாய்க்காலில் இருந்து நீரிரைத்து விவ சாயம் செய்த விவசாயிகள் இன்று கண்ணீர் விடாத குறையாக உள்ளனர். மற்ற ஆறுகள், வாய்க்கால்களி லெல்லாம் காவிரி நீர் ஓடுகிறது. சத்திய வான் வாய்க்காலில் மட்டும்தான் சாக்கடை கழிவு ஓடுகிறது. இந்த வாய்க்கால் ஓரங்களில் வசிக்கும் மக்கள் கடுமையாக வீசும் துர்நாற்றத்தால் பல்வேறு நோய்களால் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். நிலத்தடி நீரின் தன்மையும் மாறிவிட்டது. தொடர்ந்து வீசும் துர்நாற்றத்தால் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் சுவா சப் பிரச்சனை நோய்களால் பாதிக்கப்ப டுகின்றனர். ஏற்கனவே மக்கள் கொரோனா நோய் பரவலால் பாதிக்கப்பட்டு முடங்கி  கிடக்கும் நிலையில், பாசன வாய்க்கா லில் பெருக்கெடுத்து ஓடும் சாக்கடை கழி வால் பெரும் மன உளைச்சலில் உள்ள னர். இனியாவது மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து சத்தியவான் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்துமா? அதை  தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதியி னர் கோரிக்கை விடுத்துள்ளனர்.