tamilnadu

img

மின்சார சட்ட திருத்தம் 2020 மசோதாவை திரும்ப பெறுக

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூன் 2 - மின்சார சட்ட திருத்தம் 2020 மசோதாவை திரும்ப பெற வலி யுறுத்தி மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் அகில இந்திய மின் ஊழியர்கள் சங்க கூட்ட மைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். விவசாயம், குடிசை, நெசவு ஆகியவற்றிற்கு வழங்கப்படும் மானிய மின்திட்டத்தை சீர்கு லைக்காதே, மாநில மின்வாரி யத்தை பிரிக்காதே, மின்விநி யோகத்தை தனியாருக்கு தாரை வார்க்காதே, மாநில அரசின் உரி மைகளை பறிக்காதே, மின்சார சட்ட திருத்தம் 2020 மசோதாவை திரும்பபெறு என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அகில இந்திய மின் ஊழி யர்கள் சங்க கூட்டமைப்பினர் அறைகூவல் விடுத்தனர்.

இதன் ஒரு பகுதியாக  சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி மின் அலுவலகம் முன்பு கே.பழனி சாமி தலைமையிலும், உடையாப் பட்டி அலுவலகத்தில் சேலம் மின் பகிர்மான வட்ட கிளை தலைவர் பீ.கருப்பண்ணன் தலைமையி லும், காரிப்பட்டியில் டி.பழனி சாமி தலைமையிலும், சேலம் நகர கோட்டத்தில் முருகேசன் தலை மையிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.    

 தருமபுரி

தருமபுரி மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவல கம் முன்பு  நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் சிஐடியு, ஏஐசிசிடியு, ஏயுஎஸ்யு, எல்பிஎப், டிபிஏஎஸ், என்எல்ஓ, அம்பேத்கர் எம்ப்ளா யூஸ் யூனியன், பொறியாளர் கழ கம் ஆகிய சங்கத்தின் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற் றனர்.