சீர்காழி, மே 20- ஒரே தாலுகா பகுதியைச் சேர்ந்தவர்களை காவல் நிலையங்களில் பணி புரிவதற்கு அனுமதி மறுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் சீர்காழி பகுதிகளில் காவல் நிலையங்கள் அனைத்து மகளிர் காவல் நிலை யங்கள் துணை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் நகர காவல் நிலையம் ஆகியவை இயங்கி வரு கின்றன. இந்த காவல் நிலையங்களில் கடந்த சில வருடங்க ளாக காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்க ளும் ஒன்றியம் மற்றும் தாலுகா பகுதியைச் சேர்ந்தவர்களும் காவலர்களாக பணி புரிந்து வருவது அதிகரித்து வருகிறது.
ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் அந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரிவதால் சாதி, மதம் மற்றும் சொந்தபந்தம் ஆகியவைகளை காவல் நிலையங்க ளில் பயன்படுத்தி வருவதால் சட்டம், ஒழுங்கு பிரச்சனையை பாதுகாப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதற்கு தகுந்தாற் போல் சில காவலர்களும் ஒத்துப் போகின்ற னர். இதனால் சட்ட நடவடிக்கைகளை கையாள்வதில் சிரமம் ஏற்படுகிறது. காவல்நிலையங்களுக்கு சட்ட பூர்வ நடவ டிக்கையை நாடி வருபவர்கள் அலைக்கழிக்கப்படுவதுடன் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இது உள்ளூர் காவலர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்து வதாக உள்ளது. எனவே ஒரே தாலுகா மற்றும் ஒன்றியப் பகுதிகளைச் சேர்ந்தவர்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரிவதை அனுமதிக்காமல், அவர்கள் சார்ந்திருக்கின்ற தாலுகா பகுதிகளிலிருந்து வேறு தாலுகா பகுதிக்கு மாற்றி பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி.க்கு கோரிக்கை மனு அனுப்பப் பட்டுள்ளது.