tamilnadu

img

அபாயகரமான மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

உதகை, டிச.12 - கேத்தி உல்லாடா பகுதியில் அபாயகரமான ராட்சத மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட கிராமம் உல்லாடா . இங்கு உள்ள சாலையின் ஓரத்தில்  அபாயகரமான ராட்சத கற்பூர மரங்கள் அதிக அளவில் உள்ளது.  சாலை விரிவாக்கம்  காரணமாக மண் திட்டு களை அப்புறப்படுத்தி வருவதால் மரம் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள  குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே  சம்பந்தப்பட்ட துறையினர் அபாயகரமான நிலை யில் இருக்கும் ராட்சத கற்பூர மரங்களை வெட்டி அப் புறப்படுத்த வேண்டும் என்று இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.