இளம்பிள்ளை, நவ.12- சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே மின் கம்பம் சாய்ந்த நிலை யில் உள்ளதால்,பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சேலம் மாவட்டம், இளம் பிள்ளை அருகே தாரமங்கலம் ஒன்றி யத்திற்குட்பட்ட கோட்டைமேடு, பச்ச காடு பகுதியில் மாவட்ட நெடுஞ் சாலை உள்ளது. இந்த நெடுஞ் சாலையோரத்தில் அமைக்கப்பட் டுள்ள மின் கம்பங்கள் சாய்ந்து எப்போது வேண்டுமானலும் சரிந்து விழலாம் என்ற அபாய நிலை உள்ளது. இதனால் இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே சாய்ந்த மின் கம்பங்களை மாற்றி அமைக்க மின்சார வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.