தரங்கம்பாடி, மே 11- சிபிஎம் திருவிளை யாட்டம் கிளையின் நீண்ட கால உறுப்பினர் எஸ்.அஞ்சம்மாள் அண்மையில் காலமானார். இவர் மார்க்சி ஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், தரங்கம்பாடி வட்டச் செயலாளரும், திரு விளையாட்டம் முன்னாள் ஊராட்சி தலைவருமான பி.சீனிவாசன் மனைவியா வார். அவரது படத்திறப்பு நிகழ்ச்சி திருவிளையாட்டத் தில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் டி.சிம்சன் தலை மையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.துரைராஜ், தோழர் எஸ்.அஞ்சம்மாள் உருவப் படத்தை திறந்து வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜி.ஸ்டாலின், மாவட்டக் குழு உறுப்பினர்கள் இராசை யன், ரவிச்சந்திரன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.