சீர்காழி, ஆக.9- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளி டம் சோதனைச் சாவடியிலிருந்து மகேந்தி ரப்பள்ளி செல்லும் கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலை மிகவும் மோசமாக உள்ளது. சோதனைச்சாவடி அருகே சாலை யின் இரண்டு பக்கங்களிலும் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். சாலையில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் இவ்வழியே இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி தடு மாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளா கின்றனர். சைக்கிள்களில் செல்லும் பள்ளி மாணவர்களும் அடிக்கடி கீழே விழுந்து அடிபடுகின்றனர். இந்த சாலையின் இரண்டு பக்கங்களி லும் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தற்காலிகமாக மணல் மூட்டைகள் போட்டு அடுக்கி வைக்கப்பட்டு ள்ளன. நிரந்தரமாக இந்த கரை சாலையை வலுப்படுத்தி கரையின் இரண்டு புறங்களிலும் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு கான்கிரிட் சுவர் அமைத்தால் கரையை ஒட்டியுள்ள வீடுக ளில் வசிப்பவர்கள் சிரமமமின்றி வாழ்வர். எனவே சோதனைச்சாவடி அருகே சாலை யின் இரண்டு புறங்களிலும் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு கான்கிரீட் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று கொள்ளிடம் சமூக ஆர்வலர் காம ராஜ் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.