tamilnadu

img

ஓசூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு டி.கே.ரங்கராஜன் எம்பி ரூ. 10 லட்சம் நிதி

கிருஷ்ணகிரி, மார்ச் 6- ஓசூர் சீதாராம் நகர் அரசு மகளிர் மேல்  நிலைப் பள்ளியின் வாசல் பகுதி உள்வட்ட சாலையை ஒட்டியுள்ளது. கிழக்கு, வடக்கு பகுதியில் பாறைகள் உடைக்கப்பட்ட பள்ளத்தால் பாதுகாப்பு இல்லாத சூழலில்  அமைந்துள்ளது. பெண்ஆசிரியர், மாணவி களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் தேவை என்பதை அறிந்து மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜனிடம் தெரி வித்தனர். அவர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில்  இப்பளிக்கு சுற்றுச் சுவர் அமைத்துக் கொடுக்க ரூ. 10 லட்சம் ஒதுக்கினார். இதற்கு  அனுமதி கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, சுற்றுச்சுவர் கட்டும் விழாவிற்கு ஆசிரியர் ஆர்.வி.ரமாதேவி முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.ஜெயராமன், செயற்குழு உறுப்பி னர்கள் சுரேஷ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,  பிரகாஷ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சேது மாதவன், கோதண்டராமன், நாராயண மூர்த்தி, வட்டக் குழு உறுப்பினர்கள், சிபி.ஜெயராமன், நாகேஷ்பாபு, எம்எம். ராஜூ மற்றும் பலர் பங்கேற்றனர். பள்ளியின் ஆசிரியர்கள் மாணவிகள் உட்பட கலந்து கொண்டனர். சுற்றுச்சுவ ருக்கான அடிக்கல் நடப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் பேரவைத் தலைவர் ரங்காச்சாரி நன்றி கூறினார்.