தரங்கம்பாடி, மே 12- விடுதிகளில் தங்கி பயிலும் ஆதரவற்ற பள்ளி மாணவர்கள் 30 க்கும் மேற்பட்டோருக்கு பொறையார் த.பே.மா.லு கல்லூரி பேராசிரியர்கள் நிவாரண உதவிகளை வழங்கினர். அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை த.பே.மா.லு கல்லூரி முதல்வர் ஜீன்ஜார்ஜ், துணை முதல்வர்கள் ஜான்சன் ஜெயக்குமார், ஜோயல் எட்வின்ராஜ், பேராசிரியர்கள் ஜோப் பிரபாகர், கேத்தரினாள் புண்ணியவதி, ஸ்டீபன் தினகர், ராஜன், ஜூலியஸ் விஜயக்குமார், செல்வராஜ், ஆசிரியை ஜூலியட், இளஞ்செழியன், இருதயராஜ் மற்றும், இண்டேன் கேஸ் உரிமையாளர் இளங்கோவன் ஆகியோர் தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோவில், மாணிக்கபங்கு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கினர். சமூக பாதுகாப்புத் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூக பணியாளர் ஆரோக்கியராஜ், பேராசிரியர் தேவசகாயம் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.