tamilnadu

img

பெரியார் சிலை சேதம்

சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தல்

காஞ்சிபுரம், ஜன.24- காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த சாலவாக்கம், களியப்பட்டி யில் பெரியார் சிலை உள்ளது. மர்மக் கும்பல் பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்தி யுள்ளனர். பின்னர் வெள்ளி யன்று பெரியார் சிலை  உடைக்கப்பட்டு இருப்ப தைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சாலவாக்கம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிலையை சேதமாக்கிய  சமூக விரோதிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிபிஎம், திராவிடக் கழகம், திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காவல் துறை யினர் பெரியார் சிலையை துணி கொண் மறைத்தனர். பிறகு பெரியார் சிலை சீர மைக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு கலிபூங்குன்றனால் இந்த சிலை நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

;