tamilnadu

img

ஏவிசி கல்லூரியில் பொருளியல் துறை கருத்தரங்கம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் பொருளியல் துறையின் பொருளியல் மன்ற கூட்டம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஆர். நாகராஜன் தலைமை வகித்தார். ஏஆர்சி கல்லூரியின் நிர்வாக செயலாளர் டாக்டர் கே. இளங்கோவன், இந்தியாவின் தற்போதைய பொருளா தார பிரச்சனைகள் குறித்து பேசினார்.  முன்னாள் ஆங்கிலத் துறை தலைவர் எஸ். சிவகுமார், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பொருளா தாரத் துறை தலைவர் ஆர். கார்த்திகேயன் வரவேற்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியை சரண்யா தேவி மற்றும் பொருளியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர். பொருளியல் மன்ற செயலர் ஏ. ரப்பேல்ராஜ் நன்றி கூறினார்.