tamilnadu

img

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பெண்களுக்கான புதிய போட்டி

சென்னை,டிச.14 கலர்ஸ் தமிழ் தொலைக் காட்சியில் நடிகை ராதிகா தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி கேம்ஷோ நிகழ்ச்சி டிசம்பர் 23ம் தேதி இரவு 8 மணிக்கு துவங்கு கிறது. இது தொடர்பாக  விவா காம் 18 தலைவர் ரவீஸ்குமார் கூறுகையில் தனக்காக மட்டு மல்லாமல் பிறருக்காகவும் வாழும் பெண்களுக்காகவே கோடீஸ்வரி நிகழ்ச்சியை வழங்குகிறோம் என்றார் கலர்ஸ் தொலைக்காட்சி யின் வர்த்தகதலைவர் அனுப்சந்திர சேகரன் கூறுகையில், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு நிகழ்ச்சியை பரிட்சார்த்த முறையில் நடத்துவது  மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். இந்த நிகழ்ச்சியை நடத்தும் மற்றும் தொகுத்து வழங்கும் ராதிகாசரத்குமார், போட்டியாளர்களிடம் 15 கேள்விகளைகேட்பார். அந்த கேள்விகளுக்கு ரூ.1000த்திலிருந்து ரூ.1 கோடிவரை பரிசாக கிடைக்கும். போட்டியாளர் அனைத்து 15 கேள்விக ளுக்கும் வெற்றிகரமாக சரியான பதிலை அளித்து விட்டால் அவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.