சீர்காழி, ஆக.29- சீர்காழி அருகே வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை வீடு புகுந்து திருமுல்லைவாசல் அண்ணாநகரைச் சேர்ந்த பிரசாந்த்(25) பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று கழுத்தில் டூவீலர் சாவியை வைத்து நெரித்து மிரட்டியுள்ளார். அப்போது பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்த போது அந்த நபர் தப்பியோடி விட்டார். இதில் காயமடைந்த இளம்பெண்ணை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் வழக்குப் பதிந்து செய்து விசாரித்து வருகின்றனர். தகவலறிந்த மாதர் சங்க நாகை மாவட்ட தலைவர் வெண்ணிலா பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி சம்பந்தப்பட்ட குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் சி.வி.ஆர்.ஜீவானந்தம், போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்றார்.