பெரம்பலூர், மே 10- பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா சிறுகன்பூர் மேட்டு தெருவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மணி கண்டன்(23). சென்னையில் உள்ள கார் உற் பத்தி தொழிற்சாலையில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரியான பிரசன்னா (21). சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரு கிறார். நீண்ட காலமாக காதலித்து வந்த இவர்கள், பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 6 மாதத்துக்கு முன்பு சென்னை வடபழனி கோயி லில் திருமணம் செய்துக் கொண்டனர். தற்போது பிரசன்னா 6 மாத கர்ப்பமாக உள்ளதாக தெரிகிறது. கொரோனா ஊர டங்கால் சென்னையில் வேலை இல்லாமல் இருந்த இந்த தம்பதியினர் அண்மையில் சொந்த ஊர் திரும்பினர். சென்னையிலிருந்து திரும்பியதால் இவர்களை சுகாதாரத் துறையினர் வீட்டில் தனிமைப்படுத்தி வைத்தனர்.
இந்நிலையில் மணிகண்டனை சந்தித்த பிரசன்னாவின் பெற்றோர், அவரிடம் நல்லவிதமாக பேசி பிரசன்னாவை அவர்களது வீட்டுக்கு சில தினங்களுக்கு முன்பு அழைத்துச் சென்றனராம். அதன் பின்னர் மணிகண்டன் பலமுறை முயற்சி செய்தும் மனைவி பிரசன்னாவு டன் போனில் பேசவும், நேரில் பார்க்க வும் பிரசன்னாவின் பெற்றோர் அனுமதிக்க வில்லையாம். இதனால் விரக்தியடைந்த மணிகண்டன், சம்பவத்தன்று பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், மணிகண்டனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.