tamilnadu

வெண்மணி சுடருக்கு பெரம்பலூரில் உற்சாக வரவேற்பு

பெரம்பலூர், ஜன.23- ஜனவரி 23 முதல் 27 வரை சென்னையில் நடைபெறவுள்ள அகில இந்திய சிஐடியு 16-வது மாநாட்டையொட்டி வெண்மணி தியாகிகள் சுடர் பயணக் குழு செவ்வாய்க்கிழமை திருச்சி பொன்மலையில் இருந்து துவங்கி, மணப்பாறை கரூர் குளித்தலை, துறையூர் வழியாக புதன்கிழமை பெரம்பலூர் வந்த தியாகிகள் நினைவு ஜோதி பயணக் குழுவிற்கு உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது.  சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். பெரம்பலூர் புதிய-பழைய பேருந்து நிலையம், அரசு போக்குவரத்து பணிமனை, ஆட்டோ நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பிரச்சா ரங்களில் சிஐடியு நிர்வாகிகள், விதொச பி.ரமேஷ், ஆட்டோ சங்கம் ரெங்கநாதன், சி.சண் முகம், மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்பட தொழிற் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெரம்ப லூர் பகுதிகளில் பிரச்சாரம் முடித்த பின்னர் மாநாடு நடை பெறும் சென்னையை நோக்கி சென்றனர்.

;