பெரம்பலூர், செப்.17- தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் 19-ஆம் ஆண்டு தொடக்க நாள் விழா செவ் வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவல கம், தீயணைப்புத் துறை அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் எதிரே, சீமைக்கருவேல மரம், முள் புதர்களை அகற்றும் பணியில் சாலைப் பணியாளர்கள் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் பி. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற தூய்மை பணியை, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலை வர் இ.இளங்கோவன் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில், சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலர் கொளஞ்சி, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் செயலர் ஆர்.முருகேசன், மாவட்ட துணைத்தலைவர் கே.ஆளவந்தார், சாலைப் பணியாளர் சங்கத்தின் மாநிலச் செயலர் எஸ்.மகேந்திரன், மாவட்ட செய லர் சி.சுப்பிரமணியன் உள்பட 50-க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் பங்கேற்றனர். முன்னதாக வேப்பந்தட்டை உட்கோட்ட அலுவலகம் எதிரே, உட்கோட்டத் தலைவர் டி.பழனிச்சாமி, சாலைப் பணி யாளர் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில், அச்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.