tamilnadu

img

பகுதிநேர ஊழியர்களுக்கு சலுகைகள் வழங்குக! பெரம்பலூரில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், ஜூலை 17- பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பெரம்பலூர் வட்டக்கிளை சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  வட்டத் தலைவர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். வட்டச் செயலர் எம். பன்னீர்செல்வம், வட்டப் பொரு ளாளர் கே.கண்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.  ஆர்ப்பாட்டத்தில், பெண்களுக்கு தனியாக ஓய்வறை, கழிவறை, குழந்தைகள் காப்பகம் அமைக்க வேண்டும். பகுதிநேர ஊழியர்களுக்கு நிரந்தர ஊழியர்களைப்போல அனைத்து சலுகைகள் மற்றும் உரி மைகள் வழங்கிட வேண்டும். அனைத்துப் பிரிவு அலுவலகங்கள், துணை மின் நிலையங்களில் துப்பு ரவு பணியாளர்கள் காலிப்பணியிடங் களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டன.  இதில், சிஐடியு மாவட்டச் செயலர் ஆர்.அழகர்சாமி, மின்வாரிய உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்புக்குழு வட்ட கன்வீனர் சி. ராஜகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.