பெரம்பலூர், ஜூன் 11- பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமம் பச்சை மலையில் இருந்து பெரிய ஏரிக்கு வரும் நீர்வழிதட ஓடையை ஆக்கிரமிப்பு தொடர்பாக கிராமமக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வா யன்று கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில், பச்சை மலையில் இருந்து லாடபுரம் கிராமம் பெரிய ஏரிக்கு வரும் 100 அடி அகலம் கொண்ட நீர்வழித்தட ஓடையை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்து முறைகேடு செய்துள்ளார். இதனால் மழைக் காலங்களில் பச்சை மலையிலிருந்து பெரிய ஏரிக்கு வரும் நீர் மறித்து ஆக்கிர மிப்பு செய்துள்ளதால் நீர்வழித் தடத்தில் செல்ல முடியாமல் சுற்றுப்பகுதி யிலுள்ள விவசாய நிலங்களில் புகுந்து பெரும் பயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் நீர்வழித்தடத்தின் ஒரு பகுதியை வயல்களுக்கு செல்ல பாதையாகவும் பயன்படுத்தி வருகின்ற னர். இதை தவிர விவசாயிகள் தங்களது வயல்களுக்கு செல்ல வேறு பாதை இல்லை என்ற காரணத்தால் தற்போது நிலங்களை தரிசாக போட்டு வைத்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பொதுப்பணித்துறைக்கு சொந்த மான 100 அடி நீர்வழித்தட ஓடையின் ஆக்கிரமிப்பை அகற்றி தகுந்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.செல்லதுரை, மாவட்டத் தலைவர் ஏ.கே. ராஜேந்திரன், மாவட்ட துணைத்தலைவர் பி.சின்னசாமி மற்றும் அம்மா பாளையம் பெரியசாமி உள்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.